நயன்தாரா- விக்னேஷ் சிவன் சர்ச்சை.. வாடகைத் தாய் சட்டம் சொல்லும் முக்கிய ரூல் என்ன?
சென்னை: வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள என்னென்ன விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை பார்ப்போம்.
திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். கணவருக்கோ மனைவிக்கோ இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்று மருத்துவர் சான்றளிக்க வேண்டும்.
வாடகைத் தாயாக வருபவர் வணிக ரீதியில் இருக்கக் கூடாது. வாடகைத்தாய்க்கு 16 மாதங்களுக்கு காப்பீடும் ,மருத்துவ செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும். இதை தாண்டி ஒரு ரூபாய் கூட அந்த வாடகைத்தாய்க்கு இந்த தம்பதி கொடுக்கக் கூடாது.

வாடகைத் தாய்
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேறு என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம். இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சைக்கான மருத்துவமனையின் மருத்துவர் ஜெயராணி காமராஜ் விளக்கியுள்ளார்.

குழந்தை பெற்று கொடுக்கும் பெண்
அவர் கூறுகையில் வாடகைத் தாயாக வந்து குழந்தை பெற்று கொடுக்கும் பெண், குழந்தை இல்லாத தம்பதிக்கு உறவுக்கார பெண்ணாக இருத்தல் வேண்டும். அந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தையாவது இருத்தல் வேண்டும். திருமணமாகாத பெண்கள் வாடகைத்தாயாக இருத்தல் கூடாது.

யாருக்கு அனுமதி இல்லை
அது போல் வாடகைத் தாய் முறை மூலம் அணுகும் தம்பதிக்கும் திருமணமாகியிருக்க வேண்டும். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்போர் நிச்சயம் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி இல்லை. அது போல் LGBTQ பிரிவினரும், ஓரின சேர்க்கையாளர்கள் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த முக்கிய விதியைத்தான் இந்த பிரிவினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

வாடகைத்தாய் முறை
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்கும் பெண் தனது கர்ப்பப்பையை மட்டுமே கொடுக்கிறார். அதில் தம்பதியின் கருமுட்டையும் விந்தணுவும் செலுத்தப்பட்டு கருவாகிறது. ஒரு வேளை பெண்ணுக்கு கருமுட்டையே இல்லாத நிலையில் கருமுட்டையை தானம் பெற்று அதை கணவரின் விந்தணுவுடன் சேர்த்து வாடகைத்தாயின் உடலில் செலுத்தப்படும். மற்றபடி எந்த இடத்திலும் வாடகைத்தாயின் கரு முட்டை பயன்படுத்தப்படுவதில்லை என ஜெயராணி தெரிவித்துள்ளார்.

விதிமீறலா?
இந்த மருத்துவர் சொல்வதை பார்த்தால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜனவரி 2022 ஆம் ஆண்டு வாடகைத்தாய் முறைக்கு அணுகியிருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு திருமணமானதோ ஜூன் 9ஆம் தேதிதான். எனவே இது விதிமீறலா, யார் மீது நடவடிக்கை பாயும், மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை என்றால், தம்பதிக்கு என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்பதெல்லாம் நயன்தாரா- விக்னேஷ் தரப்பிடம் விசாரணை நடத்தப்பட்டு பிறகே தெரியவரும்.












Click it and Unblock the Notifications