ஒரே நாளில் தலைகீழான சைதாப்பேட்டை ஏட்டு கமலக்கண்ணனின் வாழ்க்கை .. ஒரு தவறால் மொத்தமாக வந்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் குடிபோதையில் வந்த குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் என்பவர் பெண் என்ஜினியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஒருபுறம் எனில் இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்து என்பதை பார்ப்போம்.

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான மின்சார ரயில் நிலையங்களில் ஒன்று. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், தினமும் அலுவலகத்திற்கும், வேலை நிமிர்த்தமாகவும் பயணிப்பார்கள். எப்போதுமே இந்த ரயில் நிலையம், மிகவும் பரபரப்பாகவே காணப்படும், அண்ணாசாலையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள இந்த ரயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் பயணிகள் எளிதாக பயணிக்க முடியும்.

chennai police railway station

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி இரவு பெண் என்ஜினீயர் ஒருவர், தனது சகோதரருடன் நடைமேடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது போதையில் அங்கு வந்த சைதாப்பேட்டை குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன், பெண் என்ஜினியரிடம் ஆபாசமாக பேசினாராம்.

பின்னர், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மற்றும் அவரது சகோதரர் இருவரும் போலீஸ் ஏட்டு கமலக்கண்ணனை எதிர்த்து சரமாரியாக கேள்விகளை கேட்டார்களாம். ஆனால், ஏட்டு கமலக்கண்ணன் மதுபோதையில் தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்தாராம்.

இதையடுத்து பெண் என்ஜினியரும், அவரது சகோதரரும் இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மாம்பலம் ரயில்வே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் கமலக்கண்ணன், குடிபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சைதாப்பேட்டை குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் அருண் நேற்று உத்தரவிட்டார். மேலும், தலைமறைவாக உள்ள கமலக்கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில்போலீஸ்காரர் ஒருவரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+