படையப்பா போல் சிவாஜி வீட்டில் பிரச்னை -இப்டி பண்ணிட்டாங்களே! பிரபு, ராம் மீது சகோதரிகள் புகார் என்ன?
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களை போலி உயில் மூலம் அவரது மகன்கள் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் அபகரித்துவிட்டதாக அவர்களின் சகோதரிகள் நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளனர்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் ஆகிய மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய மகள்களும் உள்ளனர்.
தமிழ் சினிமாக்களில் முன்னணி நடிகராக பிரபுவும், ராம்குமார் அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாஜகவிலும் ராம்குமார் உறுப்பினராக இருந்து வருகிறார்.

சிவாஜியின் சொத்துக்கள்
சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் சிவாஜிக்கு மட்டும் ரூ.270 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 21 ஆண்டுகளாக சிவாஜியின் குடும்பம் ஒற்றுமையான குடும்பமாகவே திரையுலகில் பார்க்கப்பட்டு வந்தது. சிவாஜியின் சொத்துக்களை அவரது வாரிசுகள் 4 பேரும் அனுபவித்து வந்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில்தான் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவர்களின் சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். அதில், தங்கள் சகோதரர்கள் தங்களுக்கே தெரியாமல் சொத்துக்களை விற்றதுடன் தங்கள் மகன்களின் பெயர்களில் சொத்துக்களை மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

போலி உயில்
தந்தை சிவாஜி கணேசன் சேர்த்து வைத்த ரூ.10 கோடி மதிப்பிலான 1,000 சவரனுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்களை தங்களிடம் வழங்காமல் சகோதரர்கள் ஏமாற்றியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் வீட்டை இருவரும் விற்றுவிட்டதாகவும், ராயப்பேட்டை வீடுகளில் இருந்து வரும் வாடகை பணத்தை தங்களுக்கு வழங்குவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிவாஜி கணேசன் சொத்துக்கள் தொடர்பாக உயில் எழுதி வைக்காத நிலையில், போலியாக உயில் தயாரித்து ஏமாற்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளனர்.

இந்து வாரிசு உரிமை சட்டம்
தாய் வழி மூலம் கிடைக்க வேண்டிய சொத்துக்களிலும் தங்களுக்கு பங்களிக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்து வாரிசு உரிமை சட்டத்தின் அடிப்படையில் சிவாஜி கணேசனின் சொத்தில் மகள்களான தங்களுக்கு உரிமை உள்ளது என்பதால் நீதிமன்றம் பாகப்பிரிவினையை முறையாக செய்துத் தர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications