Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலி பண்ண சொல்லுவாங்க! எடப்பாடிக்கு பறந்த எச்சரிக்கை! உடனே இடத்தை மாற்றி அதிரடி.. அப்போ "செவ்வந்தி"?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக செய்து வருகிறது. இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும்? எதிர்க்கட்சி துணை தலைவர் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் கடந்த வாரம் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் அதிமுக பொதுக்குழுவே செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதோடு இதற்கு எதிராக அவர் தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்துள்ளார்.

மீட்டிங்

மீட்டிங்

இது போக ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில் அவரின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி என்ன ஆகும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக செய்து வருகிறது.

கூட்டம்

கூட்டம்

இன்று நடக்கும் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக அதிமுக கூட்டங்கள் அதிமுக அலுவலகத்தில்தான் நடக்கும். ஆனால் கடந்த வாரம் பொதுக்குழு அன்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பொதுக்குழு அன்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகளுக்கும், எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளுக்கும் இடையில் மோதல் வந்தது. இந்த மோதல் அன்று கலவரமாக வெடித்தது. இதை தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

சீல்

சீல்

இதன் காரணமாக தனது கிரீன்வேஸ் இல்லத்தைதான் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மீட்டிங்கிற்காக பயன்படுத்தி வருகிறார். அங்கு இருக்கும் செவ்வந்தி இல்லம் - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசித்த இல்லம் ஆகும். தற்போது அவர் அங்கேயே தொடர்கிறார். இங்குதான் இன்று நடக்க இருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது. தமிழ்நாடு சம்பளம் வழங்கும் சட்டம், 1951ன் கீழ் இந்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் பிளான்

ஓபிஎஸ் பிளான்

அதனால் இங்கு கட்சி சார்ந்த கூட்டம் நடத்த கூடாது. அப்படி கூட்டம் நடத்தினால் அது சிக்கல் ஆகும். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் கோவை செல்வராஜ் தலைமையில் தலைமை செயலாளர் இறையன்புவிடம் இது தொடர்பாக புகார் வைத்தனர். அரசு வீட்டை கட்சி அலுவலகமாக பயன்படுத்துகிறார் என்று புகார் வைத்தனர். இதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினர்.

Recommended Video

    அதிருப்தியில் இருக்கும் ADMK நிர்வாகிகளை குறிவைக்கும் OPS
    எடப்பாடி ஆலோசனை

    எடப்பாடி ஆலோசனை

    அதோடு எடப்பாடி பழனிசாமிக்கு அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரும் இதே ஆலோசனையை வழங்கி உள்ளனர். வீட்டில் கூட்டம் நடத்துவது சரியாக இருக்காது.. அப்படி நடந்தால் வீட்டை காலி பண்ண சொல்லுவார்கள் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர். இதையடுத்து வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அதிமுக கூட்டம் சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவிற்கு மாற்றப்பட்டது. வீட்டில் கூட்டம் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு கிரவுன் பிளாசாவிற்கு கூட்டம் மாற்றப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+