இந்தியாவை கலங்க வைக்கும் "மின்னல்" தாக்குதல் மரணம்.. எந்த மாநிலங்களில் அதிகம்? எப்படி தப்பிப்பது?
சென்னை: இந்தியாவில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இயற்கை பேரிடர்களால் நிகழும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை மின்னல் தாக்குவதால் ஏற்படுவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஜெய்ப்பூர் அருகே அமர் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் கொல்லப்பட்ட 11 பேரும் அடங்குவர். இவர்கள் மின்னல் வெட்டியபோது செல்ஃபி எடுத்ததால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
"மாபெரும் மின்சார தீப்பொறி" என்று அழைக்கப்படுகிறது மின்னல். ஒரு மின்னல் 100 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வோல்ட் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது.

மின்னல் எவ்வாறு கொல்கிறது?
ஒரு மின்னல் தாக்குதல் 10,000 டிகிரி செல்சியஸ் முதல் 30,000 டிகிரி செல்சியஸ் வரை சுற்றியுள்ள காற்றை வெப்பமாக்கும். எளிமையாகச் சொன்னால், ஒரு மின்னல் தாக்குதல் பெரும் அழிவுகரமான திறனைக் கொண்டிருக்கும். பல வழிகளில் மின்னல் தாக்க முடியும் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) கூறுகிறது. முதலாவது நேரடி ஸ்ட்ரைக். இது மிகவும் அரிதானது என்றாலும், இது மிகவும் ஆபத்தானது. "பெரும்பாலும், திறந்தவெளியில் இதுபோன்ற தாக்குதல் நிகழ்கின்றன, "என NWS கூறுகிறது. மின்னலால் உருவாகும் வெப்பம் தீக்காயங்களை ஏற்படுத்தும், ஆனால் அது உடலின் ஊடாக செல்லும் மின்சாரத்தின் அளவுதான் உயிரை பறிக்க காரணமாக மாறுகிறது.

மரத்திற்கு அடியில் ஒதுங்க கூடாது
பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது 'சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. "பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது" என்று ஆய்வாளர்கள் கூறுகிறஆர்கள்.
மின்னலால் தாக்கப்பட்ட பொருளில் இருந்து, பாதிக்கப்பட்டவர் ஒரு அடி அல்லது இரண்டு அடிக்கு உள்ளே இருக்கும்போது சைட் ஃப்ளாஷ்கள் வழக்கமாக நிகழ்கின்றன. இந்தியாவின் முதல் வருடாந்திர மின்னல் அறிக்கை (2019-2020), மரத்தின் அடியில் நிற்பதுதான் மின்னல் தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்று கூறுகிறது. மின்னல் இறப்புகளில் 71 சதவீதமும், 25 சதவீதம் இறப்புகளும் மரத்தின் அடியில் ஒதுங்கும்போதுதான் ஏற்படுகிறது.

தரை மின்னோட்டம் தாக்குதல்
தரை மின்னோட்டம் மற்றொரு காரணமாக உள்ளது. "மின்னல் தாக்குதல் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ளவர்கள் நிலம் வழியாக மின்னோட்டம் பாய்வதால் பலியாகக்கூடும்" என்று NWS கூறுகிறது. நிலம் வழியான தாக்குதல் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கும் என்பதால், இது அதிக மின்னல் இறப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணமாகிறது" என்று NWS கூறுகிறது.
மின்னல் ஒரு மரத்தையோ அல்லது வேறு எந்த பொருளையோ தாக்கிய பிறகு, ஆற்றலின் பெரும்பகுதி தரை மேற்பரப்பிலும் வெளிப்புறத்திலும் பயணிக்கிறது. மிக நெருக்கமான இடத்தில் உள்ளவர்கள் உடலில் இந்த ஆற்றல் நுழைகிறது, உடலை விட்டு அது வெளியேறும் முன்பாக, இருதய மற்றும் நரம்பு மண்டலங்கள் வழியாக பயணிக்கிறது.

மின்னல் தாக்கங்கள் எவ்வளவு நிகழ்கின்றன?
இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட 2019-2020ம் ஆண்டுக்கான மின்னல் தாக்குதல் அறிக்கை, 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

எந்த மாநிலங்களில் அதிகம்
இந்தியாவில் 2019ம் ஆண்டில், மொத்தம் 2,876 மின்னல் இறப்புகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டில் 2,357 இறப்புகளாகும். பீகார் (400), மத்தியப் பிரதேசம் (400), ஜார்க்கண்ட் (334), உத்தரபிரதேசம் (321) ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும். இவை அனைத்துமே ஒரே மண்டலத்தைச் சேர்ந்த, அதாவது மத்திய இந்தியா மற்றும் மத்திய கிழக்கு இந்தியா மாநிலங்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. மின்னல் ஏற்படும் போது தங்குவதற்கு வெளியில் பாதுகாப்பான இடம் இல்லை, வீட்டுக்குள் தங்குவதே சிறந்த பாதுகாப்பு.
-
ரயில் தண்டவாளம் மழையில் நனைந்தாலும் துரு பிடிக்காது ஏன்? இந்தியன் ரயில்வே அல்டிமேட் அறிவியல் பின்னணி -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
விண்வெளியில் தலைக்கு குளிப்பது எப்படி? விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வீடியோ வைரல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications