இதுவேறையா.. ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி கோவை அருகே யானை பலி.. தடுப்பூசி பணி தீவிரம்
கோவை: ஆந்த்ராக்ஸ் நோய் காரணமாக கோவை மாவட்டத்தில், யானை உயிரிழந்ததை அடுத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் சேம்புகரையில் இரு தினங்களுக்கு முன 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிர் இழந்து கிடந்தது. அந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து யானையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

எனவே சேம்புக்கரை வனப் பகுதியை சுற்றி எட்டு கிலோமீட்டருக்கு உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டது. நேற்று முதல் இப்பணிகள் துவங்கிய நிலையில் தற்போது இப்பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இன்று 150 மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆந்த்ராக்ஸ் விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு தீவிரத் தொற்று நோய் ஆகும். அடைப்பான் நோய் என்றும இது அழைக்கப்படுகிறது.

'பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus anthracis) எனும் கோலுரு நுண்ணுயிரால் இநத் நோய் ஏற்படுகிறது. இந்நோய் கால்நடைகளுக்கும், தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டிகளுக்கும் மட்டுமே ஏற்படக்கூடியது. நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புண்டு. எனவே மக்கள் விழிப்புணர்வோடு இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications