கோவையை கதிகலங்கச் செய்த உ.பி. கொள்ளையர்கள்.. திட்டம் தீட்டிக் கொடுத்த 2 பேர் கைது
கோவை: கோவை மாநகர் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் மூன்று பேரை சுட்டுப் பிடித்திருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கொள்ளையர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கொள்ளை கும்பலுக்கு கோவையில் திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 1,848 வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பில் ஏ பிளாக்கில் 3 வீடுகள், சிா பிளாக்கில் 10 வீடுகள் என 13 வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் 42 சவரன் நகை மற்றும் 1.5 இலட்சம் ரூபாய் பணம், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

சிசிடிவி ஆய்வு
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கவுண்டம்பாளையம் போலீஸார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் ஆட்டோ மூலம் வந்து கொள்ளை அடித்து விட்டு அதே ஆட்டோவில் திரும்பச் சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஃப் 48, இர்ஃபான் 45, கல்லூ ஆரிஃப் 60 ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது, காவல் துறையினரை தாக்கிவிட்டு அம்மூவரும் தப்ப முயன்றதையடுத்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
மேலும் இருவர் கைது
இதில், காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிஃப் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கொள்ளையர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் அயூப்கானை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொள்ளை கும்பலுக்கு கோவையில் திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த தாவூத் (18) , பர்மான் (23) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே, கொள்ளையர்கள் அரசு அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications