இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 இந்திய நகரங்களில் கண்காட்சி நடத்த முடிவு!
கொழும்பு/டெல்லி: பொருளாதார பேரழிவில் தத்தளிக்கும் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தியாவின் 5 முக்கிய நகரங்களில் சுற்றுலாத்துறை தொடர்பான கண்காட்சிகள் நடத்த உள்ளதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹரின் பெர்னாண்டோ கூறியதாவது: அழகிய கடற்கரைகள், குன்றுகள், அழகான கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பொருளாதார சிக்கல்கள், கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய தேவையான வெளிநாட்டு கையிருப்பு இல்லை. மருந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு 61 ஆயிரத்து 951 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவேற்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால் இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக வருமானம் அதிகரிக்க வேண்டும் . அது மிகவும் இன்றியமையாத ஒரு வருமானமாகும். ஆகையால் இந்தியாவின் 5 மிக முக்கியமான நகரங்களில் இலங்கை சுற்றுலா தொடர்பான கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
இங்கிலாந்து உட்பட சில நாடுகள் இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு 2 இலட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தந்தனர். இந்த ஆண்டில் சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறோம். இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சமர்ப்பிக்க உள்ளது. இது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும். இவ்வாறு ஹரின் பெர்னாண்டோ கூறினார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
கொடைக்கானலில் 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது! சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை குட் நியூஸ்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications