இலங்கை: இன்று கொழும்பு சென்றடைகிறது தமிழ்நாடு அரசின் நிவாரணப் பொருட்களுடனான கப்பல் டான் பின்-99!
கொழும்பு: தமிழ்நாடு அரசின் நிவாரணப் பொருட்களுடனான கப்பல் டான் பின் 99 இன்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைகிறது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையில் அடுத்த சில மாதங்கள் நிலைமை மிக மோசமாகும்; உணவுப் பஞ்சம் ஏற்படும் என்கிறார் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.

இலங்கையின் இந்த பரிதாப நிலையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அனைத்து இலங்கை மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்தது. தமிழக அரசு சார்பில் இலங்கையின் அனைத்து இன மக்களுக்கு உதவும் வகையில் 40,000 டன் அரிசி, உயிர் காக்கும் மருந்து பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்புவது என கடந்த மாதம் 29-ந் தேதி தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு அரசு மருந்து பொருட்கள் நிறுவனம், ஆவின் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்தது.
இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதியையும் தமிழக அரசு பெற்றது. இதையடுத்து இலங்கைக்கு நிவாரணப் பொருட்களுடன் டான் பின் 99 என்ற கப்பல் சென்னையில் இருந்து புறப்பட்டது. 9000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா, 55 வகையான அத்தியாவசிய மருந்துகள் என மொத்தம் ரூ40.55 கோடி நிவாரணப் பொருட்கள் இந்த கப்பலில் கொண்டு செல்லப்பட்டன.
சென்னை துறைமுகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த புதன்கிழமையன்று இந்த கப்பலை கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இக்கப்பல் இன்று இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இதனிடையே இந்திய கடனுதவியின்கீழ் மற்றொரு 40,000 மெட்ரிக்தொன் டீசல் கொழும்பை வந்தடைந்துள்ளது என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications