பேயோட்ட வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கைதான தர்கா நிர்வாகி.. காவல் நிலையத்திலிருந்து எஸ்கேப்!
கடலூர்: விருத்தாசலம் அருகே பெண்ணாடம் கிராமத்தில் பேய் ஓட்டச் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் கைதாகி தப்பிச்சென்ற தர்கா நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்த திருமணமான 22 வயது இளம் பெண் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனைக்கு சென்றும் குணமடையாததால் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கூறி இருக்கின்றனர். இதிலிருந்து குணமடைய பெண்ணாடத்தில் உள்ள தர்காவுக்கு செல்லுமாறும் பெண்ணிடம் ஊர் மக்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண் அண்மையில் உறவினர்களுடன் தர்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கிருந்த தர்கா நிர்வாகி அப்துல் கனி (54) என்பவரிடம் பெண்ணின் நிலை குறித்து உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து உறவினர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு பெண்ணை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார் அப்துல் கனி. சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அந்த பெண் பேய் ஓட்டுவதாகக் கூறி அப்துல் கனி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார்.
ஆத்திரமடைந்த உறவினர்கள் அப்பெண்ணை மீட்டு, அப்துல் கனியை பிடித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெண்ணாடம் போலீசார் அப்துல் கனி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கனி அங்கிருந்து தப்பிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்று தலைமறைவான தர்கா நிர்வாகி அப்துல் கனியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications