Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரௌபதி முர்முவுக்கு.. வாக்களித்த எதிர்க்கட்சி எம்பி & எம்எல்ஏக்கள்! அடேங்கப்பா.. இத்தனை பேரா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளது தெரிய வந்துள்ளது.

நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24இல் நிறைவடையும் நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டெல்லியில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

 குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாக பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தன. அதன் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களமிறங்கினர். இருவரும் நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டினர்.

ஆதரவு

ஆதரவு

இந்த குடியரசு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தன. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சுமார் 3 ஆண்டுகளாகக் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த சிவசேனா ஆகியவையும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தது.

வெற்றி

வெற்றி

இதனால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் திரௌபதி முர்மு அதிக வாக்குகளைப் பெற்றார்.மூன்றாம் சுற்றிலேயே 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 64 வயதாகும் திரௌபதி முர்மு வெற்றியை உறுதி செய்தார். இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர். மேலும், இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் பெறுகிறார்..

 வாக்குகள் எத்தனை

வாக்குகள் எத்தனை

மூன்றாவது சுற்று முடிவில் திரௌபதி முர்முவுக்கு 2161 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் எஸ்வந்த் சின்ஹாவுக்கு 1058 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். அதேபோல யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் மதிப்பு 2,61,062 ஆகும். கடந்த காலங்களில் ராம்நாத் கோவிந்த்திற்கு 65% வாக்குகளும், பிரணாப் முகர்ஜிக்கு 69% வாக்குகளும் நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாடீலுக்கு 65% வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றதற்குத் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
     கட்சி மாறி வாக்களிப்பு

    கட்சி மாறி வாக்களிப்பு

    இதனிடையே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கட்சி உத்தரவைத் தாண்டி திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் சமயத்திலேயே சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாங்கள் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்து இருந்தனர். அப்படி மொத்தம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 17 எம்பிகக்கள் கட்சியின் உத்தரவை மீறி திரௌபதி முர்முவுக்காக வாக்களித்து உள்ளனர். அதேபோல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் 104 எம்எல்ஏக்களும் திரௌபதி முர்முவுக்காக வாக்களித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி மாறி வாக்களித்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+