திரௌபதி முர்முவுக்கு.. வாக்களித்த எதிர்க்கட்சி எம்பி & எம்எல்ஏக்கள்! அடேங்கப்பா.. இத்தனை பேரா!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளது தெரிய வந்துள்ளது.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24இல் நிறைவடையும் நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டெல்லியில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாக பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தன. அதன் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களமிறங்கினர். இருவரும் நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டினர்.

ஆதரவு
இந்த குடியரசு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தன. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சுமார் 3 ஆண்டுகளாகக் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த சிவசேனா ஆகியவையும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தது.

வெற்றி
இதனால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் திரௌபதி முர்மு அதிக வாக்குகளைப் பெற்றார்.மூன்றாம் சுற்றிலேயே 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 64 வயதாகும் திரௌபதி முர்மு வெற்றியை உறுதி செய்தார். இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர். மேலும், இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் பெறுகிறார்..

வாக்குகள் எத்தனை
மூன்றாவது சுற்று முடிவில் திரௌபதி முர்முவுக்கு 2161 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் எஸ்வந்த் சின்ஹாவுக்கு 1058 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். அதேபோல யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் மதிப்பு 2,61,062 ஆகும். கடந்த காலங்களில் ராம்நாத் கோவிந்த்திற்கு 65% வாக்குகளும், பிரணாப் முகர்ஜிக்கு 69% வாக்குகளும் நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாடீலுக்கு 65% வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

கட்சி மாறி வாக்களிப்பு
இதனிடையே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கட்சி உத்தரவைத் தாண்டி திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் சமயத்திலேயே சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாங்கள் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்து இருந்தனர். அப்படி மொத்தம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 17 எம்பிகக்கள் கட்சியின் உத்தரவை மீறி திரௌபதி முர்முவுக்காக வாக்களித்து உள்ளனர். அதேபோல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் 104 எம்எல்ஏக்களும் திரௌபதி முர்முவுக்காக வாக்களித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி மாறி வாக்களித்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications