Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய வாக்காளரை தேர்வு செய்ய... இனி ஆண்டுக்கு 4 தகுதி நாட்கள்...மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : 18 வயது பூர்த்தி அடைபவர்களை உடனுக்குடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

இதுநாள் வரை ஜனவரி 1ம் மட்டும் தகுதி அடிப்படை நாளாக இருந்து வந்த நிலையில், இனி ஆண்டுக்கு 4 நாட்கள் தகுதி ஏற்படுத்தும் நாட்களாக அறிவிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் 18 வயதை பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டியதில்லை. 3 மாதங்களில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் 140 கோடி மக்கள்

இந்தியாவில் 140 கோடி மக்கள்

சுமார் 140 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 74 ஆயிரம் பிறப்புகளும், 30 ஆயிரம் மரணங்களும் நிகழ்கின்றன. அதன்படி இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 18 வயதை பூர்த்தி அடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் பேர். இந்திய அரசியல் சாசனத்தின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி உடையவர்கள். அதாவது வாக்காளர் அட்டை பெறவேண்டும் என்றால் கூட அவர்கள் 18 வயதை பூர்த்தி அடைய வேண்டும். இதுநாள் வரை ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு முன்னர் பிறந்த தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வந்தது.

புதிய ஓட்டர் ஐடிக்கு ஒரு காண்டு

புதிய ஓட்டர் ஐடிக்கு ஒரு காண்டு

இந்நிலையில் ஒருவர் ஜனவரி 2ம் தேதிக்கு பிறந்திருந்தால் அவர் புதிய வாக்காளர் அட்டைக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இதனால் ஒரே சமயத்தில் ஏராளமானவர்கள் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் சூழல் ஏற்படுகிறது. அதே சமயம் தேர்தல் வருகின்ற காலத்தில் கிட்டத்தட்ட 20 கோடி பேர் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.இந்த பிரச்சனைகளை சமாளிக்கவும் தேர்தல் நேரங்களில் கூடுதல் வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்கும் ஆண்டுக்கு 4 தகுதி ஏற்படுத்தும் நாட்களை நிர்ணயிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு வலியுறுத்தி இருந்தது.

3 மாதத்திற்கு ஒரு தகுதி நாள்

3 மாதத்திற்கு ஒரு தகுதி நாள்

இந்நிலையில் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களிலும் 1ம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாட்களாக உருவாக்கப்பட உள்ளது. இதனால் புதிய வாக்காளர்கள் ஒரு ஆண்டு வரை காத்திருக்காமல் அதிகபட்சம் 3 மாதங்கள் காத்திருந்தால் போதுமானது. புதிய வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். தேர்தலின்போதும் சுமார் 15 கோடி வாக்காளர்கள் புதியதாக வாக்களிப்பார்கள். இதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை புதுப்பித்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கும் மாநிலங்கள் இந்த பட்டியலை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் வாக்காளர் அட்டை

ஆன்லைனில் வாக்காளர் அட்டை

புதிய வாக்காளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க www.nvsp.in மற்றும் https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்களை பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் சமீபத்தில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 6,28,094,531 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்களாக உள்ளனர். இதில்
3,09,17,667 ஆண் வாக்காளர்கள், 3,19,69,522 பெண் வாக்காளர்கள், 7,342 மூன்றாம் பாலினத்தவர் இருக்கின்றனர். சோழிங்கநல்லூர் (7,00,048) அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், சென்னை துறைமுகம் (1,76,679) குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+