"பேரழிவு நடந்திருக்கும்" மக்களை ஆபத்தில் தள்ளிய ஏர் இந்தியா! ஒரு மாதமாக மாபெரும் பாதுகாப்பு குறைபாடு
டெல்லி: இந்தியாவில் இருக்கும் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா இருக்கிறது. இருப்பினும் அந்நிறுவனம் வரிசையாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அப்படித் தான் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. ஏர் இந்தியா விமானம் சுமார் ஒரு மாதம் மிக பெரிய பாதுகாப்பு குறைபாடு உடன் பறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
இந்தியாவில் இப்போது விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவில் விமானங்கள் இல்லை. இப்போது நமது நாட்டில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா மட்டுமே முக்கிய நிறுவனங்களாக உள்ளன. கூடுதலாகச் சில நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றின் மார்கெட் பெரியளவில் இல்லை.

ஏர் இந்தியா
இப்போது சந்தையைப் பிடிப்பதில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த விமான விபத்து ஏர் இந்தியா இமேஜ்ஜை கடுமையாகப் பாதித்துள்ளது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் ஏர் இந்தியா வரிசையாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இப்போதும் ஏர் இந்தியா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதாவது ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏ320 விமானம் ஒன்று ஏஆர்சி எனப்படும் Airworthiness Review Certificate இல்லாமல் இயங்கியுள்ளது. இந்தியாவில் இயக்கப்படும் எல்லா விமானங்களுக்கும் இந்த ஏஆர்சி பெறப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், ஏர் இந்திய விமானம் அந்தச் சான்றிதழ் இல்லாமலேயே கடந்த நவம்பர் மாதம் முழுக்க இயக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குளறுபடி
வழக்கமான ஆய்வுப் பணிகளில் தான் இதை ஏர் இந்தியா கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக ஏர் இந்தியா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சார்பிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வருந்தத்தக்கது எனக் குறிப்பிட்ட ஏர் இந்தியா, இது தொடர்பாக உடனடியாகச் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
ARC என்பது ஒரு விமானத்தின் முதன்மை விமானத் தகுதிச் சான்றிதழ் ஆவணமாகும். பராமரிப்புப் பதிவுகள் தொடங்கி விமானப் பாதுகாப்பு வரை எல்லாவற்றையும் இதில் விரிவாக ஆய்வு செய்வார்கள். ஏர் இந்தியாவின் ஒரு ஏர்பஸ் A320 விமானம் மட்டும் இந்தச் சான்றிதழ் இல்லாமலேயே பலமுறை இயங்கியது.
கடந்தாண்டு தான் ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா முழுமையாக இணைக்கப்பட்டது. அதன்படி விஸ்தாராவின் 70 விமானங்களுக்கான முதல் ஏஆர்சியை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வழங்கும் என முடிவு செய்யப்பட்டது. அதில் 69 விமானங்களுக்கான ARC எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. மிஸ்ஸான ஒரு விமானம் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஆய்வுகள்
அதாவது அந்த 70வது விமானம் இன்ஜின் மாற்றத்திற்காகத் தரையிறக்கப்பட்டது. சரியாக அந்த நேரத்தில் ARC காலாவதியானது. இருப்பினும், அதை கவனிக்காமல் ஊழியர்கள் இஞ்சினை மாற்றி, விமானத்தை வழக்கமான சேவைக்கு அனுப்பியுள்ளனர். இதுவே அங்குப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்திற்கு ARC செயல்முறை இப்போது நடந்து வருகிறது. இந்த விசாரணை முடியும் வரை ஏர் இந்தியா சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா விசாரணையை ஆரம்பித்துள்ள நிலையில், தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications