முகமது ஜுபைரின் போலீஸ் காவலை நீட்டித்த நீதிமன்றம்! சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
டெல்லி: மத உணர்வை தூண்டியதாக கூறி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு மேலும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
Recommended Video
Alt News இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். பத்திரிகையாளரான இவர் வலதுசாரிகளின் போலி செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிட்டு வந்தார்.
இவர் மதம்சார்ந்த விஷயங்கள் பற்றி தொடர்ச்சியாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவர் மதம்சார்ந்த சிலரது நம்பிக்கைகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வலதுசாரி அமைப்பினரால் கடுமையாக விமர்சித்து வந்தார்.

விசாரணைக்கு சென்றவர் கைது
இந்நிலையில் அவர் ஜாமின் பெற்றுள்ள வழக்கு விசாரணைக்காகமுகமது ஜுபைர் சென்றார். அப்போது அவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்), 295A (மத உணர்வுகளை தூண்டி சமூக அமைதியை சீர்குலைப்பது) ஆகியவற்றின் கீழ் ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2018 ல் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் காவல் நீட்டிப்பு
இதையடுத்து அவரை போலீசார் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் மேலும் 4 நாள் அவரது போலீஸ் காவலை நீட்டித்து வழங்கியது. இதன்மூலம் 4 நாட்கள் அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் எதிர்ப்பு
முகமது ஜுபைரின் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் முகமது ஜுபைர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மன்றத்தின் இணை செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை செய்ய வேண்டும்
‛பேக்ட்செக்' இணையதளமான ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபைரை போலீசார் கைது செய்துள்ளதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறது. இன்னொரு வழக்கு விசாரணைக்கு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ம் ஆண்டுக்கான டுவிட்டர் பதிவு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது காவல்துறையின் அத்துமீறல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். இதனால் இந்த வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று நிபந்தனை இன்றி அவரை விடுதலை செய்ய வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications