நாகாலாந்து: 3 முறை ராணுவம் துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் 14 பேர் பலி- அமித்ஷா விளக்கம்
டெல்லி: நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பொதுமக்கள் மீது ராணுவம் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் மொத்தம் பொதுமக்கள் 14 பேர் பலியானதாகவும் லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். மேலும் இனிமேல் இது போன்ற சம்பவம் நிகழாது என்றும் இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்துக்குரியது என்றும் அமித்ஷா கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று காலை முதலே நாகாலாந்து விவகாரம் எதிரொலித்தது. நாகாலாந்தில் 14 அப்பாவி சுரங்கத் தொழிலாளர்களை தீவிரவாதிகள் என சந்தேகித்து ராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதே கோரிக்கை லோக்சபாவிலும் வலியுறுத்தப்பட்டது.

அமித்ஷா அறிக்கை தாக்கல்
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகாலாந்து சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது: நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தின் ஓடிங் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுதான் நடந்தது?
ஓடிங் பகுதியில் 21-வது பிரிவு கமாண்டோக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வாகனம் சென்றது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட ராணுவத்தினர் முயற்சித்தனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனையடுத்தே ராணுவத்தினர் வாகனத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் அங்கேயே உயிரிழந்தனர்.

2-வது முறை துப்பாக்கிச் சூடு
இதன்பின்னரே வாகனத்தில் சென்றவர்களை தவறுதலாக ராணுவத்தினர் சுட்டதாக தெரியவந்தது. இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராணுவத்தினரை தாக்கினர். ராணுவ வாகனங்களைத் தீக்கிரையாக்கினர். ராணுவ முகாமுக்கும் தீ வைத்தனர். இதனால் ராணுவத்தினர் தற்காப்புக்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த 2-வது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

3-வது முறை துப்பாக்கிச் சூடு
இந்த சம்பவங்களுக்கு ராணுவம் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய விசாரணை நடத்துவதற்காக மேஜர் ஜெனரல் நிலையிலான ராணுவ அதிகாரி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

பொதுமக்கள் படுகொலை வருத்தம்
பொதுமக்கள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டது மிகுந்த வருத்தம் தரக் கூடியது. மத்திய அரசு இது தொடர்பாக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது. நாகாலாந்தில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Recommended Video

30 நாட்களில் அறிக்கை
இந்த சம்பவங்களுக்கு ராணுவம் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய விசாரணை நடத்துவதற்காக மேஜர் ஜெனரல் நிலையிலான ராணுவ அதிகாரி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாது என உறுதியளிக்கிறோம். இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications