அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேற தடை.. ED - CBIக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: வங்கிகளில் ரூ.40 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மீது வழக்குகள் உள்ளன. இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை சரியாக விசாரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு சிறப்பு விசாரணை குழு அமைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனில் அம்பானி நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது எனக்கூறியநீதிமன்றம் எஸ்ஐடி அமைக்க அதிரடியாக உத்தரவிட்டது.

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி. இவர் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் வங்கிகளில் கடன் வாங்கி அதனை பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்திதாக கூறப்படுகிறது. யெஸ் வங்கி ரூ.2,796 கோடி கடன் வழங்கியது. அதனை அவர் சட்டவிரோதமாக பிற நிறுவனத்துக்கு பயன்படுத்தி உள்ளார்.
ரூ.40,000 கோடி வரை மோசடி
மொத்தம் ரூ.40 ஆயிரம் கோடி வரை அனில் அம்பானி பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்றம் விசாரணை
இந்நிலையில் தான் அனில் அம்பானிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பக்சி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையில் உச்சநீதிமன்றம் திருப்தியடையவில்லை.
இதனால் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
மூத்த அதிகாரிகள் கையாள..
மேலும் உச்சநீதிமன்றம், ‛இந்த வழக்குகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரிகள் சரியாக விசாரிக்க வேண்டும். மூத்த அதிகாரிகள் இந்த வழக்கை கையாள வேண்டும். வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா? என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு?
வங்கி அதிகாரிகளின் உதவியுடன் கடன்கள் வழங்கப்பட்டதா அல்லது நிதி விடுவிக்கப்பட்டதா என்பதை விசாரிப்பது அவசியம் . கூட்டு சதி அல்லதுஉடந்தையாக இருந்தவர்கள் பற்றி நியாயமாகவும், பாரபட்சமாகவும் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்ஐடி அமைக்க...
அதேவேளையில் இந்த வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை விரைவாக செயல்பட வில்லை என்று கருதுகிறோம். இரு ஏஜென்சிகளும் நான்கு வாரங்களுக்குள் விரிவான நிலை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அமலாக்கத்துறை எஸ்ஐடி அமைத்து வுிசாரணை நடத்த வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
நாட்டை விட்டு வெளியேற..
இதையடுத்து அனில் அம்பானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஷத்கி, முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறமாட்டார் என்றும் நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளுக்கும் இணங்குவார் என்றும் கூறினார்.
இதற்கு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பு இத்தகைய உறுதிமொழி வழங்கப்பட்ட பிறகு ஒருவர் வெளிநாடு சென்றதாக கூறினார். இருப்பினும் நீதிமன்றம் அனில் அம்பானி தரப்பு வழக்கறிஞரின் கூற்றை ஏற்றது. நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என்று கூறியது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications