Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர்.. ஆவேசமான பாஜக.. நாடு முழுக்க ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவை கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பிலாவல் பூட்டோவின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபடும் பாஜகவினர், தனது பேச்சுக்கு பிலாவல் பூட்டோ மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, மோடி குறித்து பிலாவல் பூட்டோ தெரிவித்த விமர்சனங்கள் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மோடியை விமர்சித்த பாக், அமைச்சர்

மோடியை விமர்சித்த பாக், அமைச்சர்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதால் பொறுமை இழந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் என்றும், சர்வதேச தீவிரவாதி பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு எனவும் விமர்சித்தார். இந்நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர்தான் இந்தியாவின் பிரதமர்" என பிலாவால் பூட்டோ கூறினார்.

 இந்தியா கடும் கண்டனம்

இந்தியா கடும் கண்டனம்

இதனிடையே, பாகிஸ்தான் அமைச்சர் பிலாவால் பூட்டோவின் இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமர்சனம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானின் இந்த விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்தது. தன் மீது தீவிரவாத நாடு என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டதாலும், பழைய காலங்களை போல தீவிரவாதத்தை பயன்படுத்த முடியவில்லையே என்ற விரக்தியிலும் பாகிஸ்தான் உள்ளது. அந்த விரக்தியின் வெளிப்பாடாகவே பாகிஸ்தானின் இந்த விமர்சனத்தை கருத வேண்டியுள்ளது. மும்பை, நியூயார்க், புல்வாமா, பதான்கோட், லண்டன் போன்ற நகரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு உலகம் முழுக்க தீவிரவாத தடங்களை பதித்த பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்றுதான் சொல்ல முடியும். அந்த வார்த்தை பிடிக்கவில்லை என்றால் தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், பிரதமர் மோடி மீதான பாகிஸ்தான் அமைச்சரின் விமர்சனம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக நேற்று அறிவித்தது. அதன்படி, நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெற்றன.

 பாக். தூதரகம் முற்றுகை

பாக். தூதரகம் முற்றுகை

இதன் ஒருபகுதியாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோ ஜர்தாரிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் பிலாவலின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+