"ரூ.300 கோடி" லஞ்ச விவகாரம்! காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ விசாரணை!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் 300 கோடி ரூபாய் லஞ்ச விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக்! இவர் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை காஷ்மீர் ஆளுநராக இருந்தார்.
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, இரு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க சிலர் முன் வந்ததாக சத்யபால் மாலிக் பரபர குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.
காஷ்மீரைத் தொடர்ந்து அவர் கோவா ஆளுநராக 2019- 2020 வரை இருந்தார். அதைத் தொடர்ந்து மேகாலயா ஆளுநராக 2020 முதல் கடந்த அக். 3ஆம் தேதி வரை இருந்தார். ஆளுநர் பதவிக் காலம் முடிந்த சில நாட்களிலேயே இப்போது காஷ்மீரில் சிலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் கூறிய புகார் தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
கிரு நீர் மின் திட்டம் தொடர்பான 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்க தன்னிடம் 300 கோடி ரூபாய் லஞ்சம் தர சில நிறுவனங்கள் முன்வந்ததாக அவர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், இப்போது சத்யபால் மாலிக்கிடம் சிபிஐ விசாரணை நடத்தினர். இவர் காஷ்மீரில் ஆளுநராக இருந்த போது தான், காஷ்மீரில் சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications