சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - சென்னை மண்டலத்தில் 98.97% பேர் தேர்ச்சி
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இத்தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 94.40% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 94.40% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ ரிசல்ட் வருவதில் தாமதம் இல்லை என்றும், சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி வரை நடந்து கொண்டிருந்தது. என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு, ஏப்ரல் 26 முதல் ஜூன் 15 வரை நடைபெற்ற CBSE 10வது, 12வது பருவம் 2 தேர்வுகள் 2022 இல் கிட்டத்தட்ட 35 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.. CBSE 10ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 21 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள், மதிப்பெண்களை cbseresults.nic.in மற்றும் results.gov.in இல் பார்க்கலாம். இத்தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 94.40% தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 98.97% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சிபிஎஸ்இ ஏற்கனவே cbseresults.nic.in இல் 12 ஆம் வகுப்பு 2 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டது. எஸ்எம்எஸ் சேவை மற்றும் ஐவிஆர்எஸ் மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண்களை சரிபார்க்கலாம். மாணவர்கள் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications