நீடிக்கும் வன்முறை- மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு- மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மணிப்பூர் இனவன்முறைகளைத் தொடர்ந்து மாநில ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும். சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா,மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்த பின்னர் அமைதிக் குழுவை அமைப்பதாக அறிவித்தார். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் மைத்தேயி இன மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கூடாது என்பது குக்கி இனமக்களின் போராட்டம். இது வன்முறையாக வெடித்ததி 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி குக்கிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கிறது இந்த வன்முறைகள். இதனையடுத்து மணிப்பூர் வன்முறை மற்றும் சதி ஆகியவை தொடர்பாக சிபிஐ விசாரிக்கிறது. இது தொடர்பாக 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications