காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சுர்ஜிவாலா, திக்விஜய் சிங்கிற்கு கொரோனா
டெல்லி : நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 2.17 லட்சமாக அதிகரித்துள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சமீப நாட்களாக சினிமா, விளையாட்டு, அரசியல் என பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் ஒரு புறம் தீவிரமாக நடந்து வந்தாலும், மற்றொரு புறம் நோய் பரவலும் அதிகரித்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர்களுக்கு கொரோனா
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான ரன்தீப் சுர்ஜிவாலாவிற்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்
இது பற்றி சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை எனக்கு கொரோனா பாசிடிவ் உறுதியானது. கடந்த 5 நாட்களாக என்னுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ அவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நான் தனிமையில் இருக்கிறேன்
திக்விஜய் சிங்கின் ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாசிடிவ் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நான் டெல்லியில் உள்ள வீட்டில் தனிமையில் இருக்கிறேன். இந்த சமயத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, உரிய பரிசோதனைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மோடி அரசை குற்றம்சாட்டி சுர்ஜிவாலா
ஏப்ரல் 14 அன்று தான், கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு முற்றிலும் அலட்சியமாக உள்ளதாகவும், பிரதமர் மோடி கொரோனா விவகாரத்தை மிக சாதாரணமாக கையாள்வதாகவும், மோடி அரசு மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் செய்தியாளர் சந்திப்பின் போது சுர்ஜிவாலா குற்றம்சாட்டி இருந்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications