உயிருக்கு ஆபத்தானதா கொரோனா XE! 4வது அலைக்கு அடித்தளமிடுமா? பிரபல வைரலாஜி நிபுணர் தரும் முக்கிய தகவல்
டெல்லி : கொரோனா XE மாறுபாடு மற்ற பாதிப்புகளை விட அதிகமாக பரவக்கூடியதா? இது இந்தியாவில் 4வது அலையை ஏற்படுத்துமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இவ்வகை வைரஸ் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இல்லை என்று பிரபல நுண்ணுயிரியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார்,
Recommended Video
2020ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் மிகத் தீவிரமாக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு 3ஆம் அலைக்குப் பிறகு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் அதிவேகமாக பரவக்கூடிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான "எக்ஸ் இ"வகை பாதிப்பு கண்டறியப்பட்டு பீதியை அதிகரித்துள்ளது. தற்போது மும்பை குஜராத் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா XE
எற்கனவே இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், இக்ஸ் இ வகை வைரஸ் இதற்கு வழிகோலும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல் இவ்வகை வைரஸ் மிக வேகமாக பரவும் என கூறப்பட்டுள்ளதால் அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா XE மாறுபாடு மற்ற பாதிப்புகளை விட அதிகமாக பரவக்கூடியதா? இது இந்தியாவில் 4வது அலையை ஏற்படுத்துமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

டாக்டர் ககன்தீப் காங்
இந்நிலையில், இவ்வகை எக்ஸ் இ வைரஸ் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இல்லை என்று பிரபல நுண்ணுயிரியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில் தற்போது பரவிவரும் எக்ஸ் இ வகை வைரஸ் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை என்றும் எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

கவலைப்பட தேவையில்லை
வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியரான ககன்தீப் காங், எக்ஸ்இ கொரோனா வைரஸ் பற்றி கவலைப்பட தேவையில்லை ஏன் புதிய வகை வைரஸ் பற்றி அச்சப்பட வேண்டும்? வைரஸ் என்றாலே அதன் உருமாறிய வைரஸ்கள் வந்துகொண்டுதான் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதிலும் கொரோனா வைரஸ் என்றாலே உருமாறிய வைரஸ்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அது பற்றி அறிவித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

ஆபத்து இல்லை
இது முந்திய வைரஸ்களை விட அதிகமாக பரவும் திறன் கொண்டது தான். ஆனால் அது ஆபத்தை ஏற்படுத்துமா என்றால் இந்த நொடி வரை அப்படி இல்லை. ஏற்கனவே பிஏ2 வைரஸ் பரவிய போது மிகுந்த அச்சம் ஏற்பட்டது, ஆனால் பிஏ1ஐ விட அதிக ஆபத்தை கொண்டிருக்கவில்லை. அதிகம் வேகமாக பரவுகிறது என்பது ஒரு விஷயமே இல்லை. அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நான் கூட அதைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று ககன்தீப் காங் கூறியுள்ளார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications