உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 1.02 லட்சம் பேர் மீண்டனர் - 1.66 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.02 கோடி ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: உலக அளவில் 1.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.02 கோடி ஆக உயர்வு . உலக அளவில் கொரோனாவிற்கு 6.55 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீயாக பரவி வருகிறது. ஏழை, பணக்காரன் என்றெல்லாம் கொரோனாவிற்கு தெரியாது எல்லோரையும் தொட்டுப்பார்த்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள் கொரோனா உடன் எதிர்த்து போராடி மீண்டு வருகின்றனர். வேறு நோய் பாதிப்பு இருப்பவர்கள்தான் கொரோனாவிற்கு பலியாகி விடுகின்றனர். தினசரியும் கொரோனா தொற்றுக்கு 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 60,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.32 லட்சமாக உயர்ந்துள்ளது. அங்கு ஒன்றரை லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.
பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.42 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.34 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 14.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 33 ஆயிரம் பேர் வரை கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 9 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருக்கின்றனர்.
பிரிட்டனில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டன் தற்போது 10வது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ்க்கு இன்னமும் மருந்தே கண்டுபிடிக்கவில்லை. அப்படி இருந்தும் தற்போது கொடுக்கப்படும் சிகிச்சைகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 1.02 கோடி பேர் மீண்டு உலக மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளனர். கொரோனா தொற்று பாசிட்டிவ் என உறுதியானாலே பயப்பட வேண்டாம். சரியான சத்தான உணவு சாப்பிட்டு அரசு கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து மீளலாம் என்று நம்பிக்கை தருகின்றனர் 1 கோடி பேர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications