குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு.. பள்ளிகளை மூடுவது நியாயமில்லை.. உலக வங்கி கல்வி இயக்குனர் சொல்கிறார்
டெல்லி: கொரோனா காரணமாக பள்ளிகளை மூடுவது நியாயமில்லை என்று உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கூறியுள்ளார். புதிய அலைகள் இருந்தாலும், பள்ளிகளை மூடுவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிமாக உள்ள நிலையில் ஏராளமான நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன. இந்தியாவிலும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளை மூட்டியுள்ளன.

எந்த ஆதாரமும் இல்லை
இந்த நிலையில்தான் பள்ளிகளை மூடுவது நியாயமில்லை என்று உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா தெரிவித்துள்ளார். கல்வித் துறையில் கொரோனாவின் தாக்கத்தைக் கண்காணித்து வரும் சாவேத்ரா, பள்ளிகளை மீண்டும் திறப்பது கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுதான் சரி
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வரை காத்திருப்பது பொதுக் கொள்கை கண்ணோட்டத்தில் அர்த்தமற்றது என்றும், அதற்குப் பின்னால் அறிவியல் எதுவும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.பள்ளிகளைத் திறப்பதற்கும் கொரோனா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டையும் இணைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள அவர் புதிய அலைகள் இருந்தாலும், பள்ளிகளை மூடுவதை கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பார்களை மட்டும் திறக்கலாமா?
உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களைத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகளை மூடுவது அர்த்தமற்றது. இதற்கு எந்த மன்னிப்பும் கிடையாது என்றும் ஜெய்ம் சாவேத்ரா தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் நாம் அறியாமையின் கடலில் பயணித்தோம். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி எது என்று நமக்கு தெரியவில்லை.

குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு
பள்ளிகளைத் திறப்பது வைரஸ் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தியபோது அது இல்லை என்பதைக் காட்டியது என கூறிய ஜெய்ம் சாவேத்ரா குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் இறப்பு மற்றும் கடுமையான நோய்ஏற்படுவது மிகவும் அரிதானது. ஆபத்துகள் குறைவு என்றும் நம்பிக்கை கூட்டினார்.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications