குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு.. பள்ளிகளை மூடுவது நியாயமில்லை.. உலக வங்கி கல்வி இயக்குனர் சொல்கிறார்
டெல்லி: கொரோனா காரணமாக பள்ளிகளை மூடுவது நியாயமில்லை என்று உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கூறியுள்ளார். புதிய அலைகள் இருந்தாலும், பள்ளிகளை மூடுவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிமாக உள்ள நிலையில் ஏராளமான நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன. இந்தியாவிலும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளை மூட்டியுள்ளன.

எந்த ஆதாரமும் இல்லை
இந்த நிலையில்தான் பள்ளிகளை மூடுவது நியாயமில்லை என்று உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா தெரிவித்துள்ளார். கல்வித் துறையில் கொரோனாவின் தாக்கத்தைக் கண்காணித்து வரும் சாவேத்ரா, பள்ளிகளை மீண்டும் திறப்பது கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுதான் சரி
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வரை காத்திருப்பது பொதுக் கொள்கை கண்ணோட்டத்தில் அர்த்தமற்றது என்றும், அதற்குப் பின்னால் அறிவியல் எதுவும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.பள்ளிகளைத் திறப்பதற்கும் கொரோனா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டையும் இணைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள அவர் புதிய அலைகள் இருந்தாலும், பள்ளிகளை மூடுவதை கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பார்களை மட்டும் திறக்கலாமா?
உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களைத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகளை மூடுவது அர்த்தமற்றது. இதற்கு எந்த மன்னிப்பும் கிடையாது என்றும் ஜெய்ம் சாவேத்ரா தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் நாம் அறியாமையின் கடலில் பயணித்தோம். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி எது என்று நமக்கு தெரியவில்லை.

குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு
பள்ளிகளைத் திறப்பது வைரஸ் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தியபோது அது இல்லை என்பதைக் காட்டியது என கூறிய ஜெய்ம் சாவேத்ரா குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் இறப்பு மற்றும் கடுமையான நோய்ஏற்படுவது மிகவும் அரிதானது. ஆபத்துகள் குறைவு என்றும் நம்பிக்கை கூட்டினார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications