அவதூறு செய்திகளை பரப்பினால்.. இனி கிரிமினல் வழக்குதான்.. யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு கெடுபிடி
டெல்லி: அவதூறு செய்திகளை பரப்பும் மற்றும் தேசத்துக்கு எதிராகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செய்திகளை பதிவிடும் யூடியூப் சேனல்கள் மீது க்ரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி மக்களின் பொழுதுபோக்கிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களின் அளப்பறிய வளர்ச்சியால் தற்போது கையடக்க செல்போனில் அனைத்து தகவல்களையும் நாம் பெற முடியும் அளவுக்கு உலகம் சுருங்கி விட்டது.

யூடியூப் வீடியோ
செய்திகள் முதல் படங்கள் வரை அனைத்தும் நேரடியாக இணையம் மூலமாக நம் உள்ளங்கைகளுக்கே வந்துவிட்டது என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் வளர்ந்துவிட்டது. அதிலும் தற்போது யூடியூப் உள்ளிட்ட வீடியோ தளங்களில் யார் வேண்டுமானாலும் தனியாக சேனல்களை தொடங்கிவிடலாம் என்ற நிலை உள்ளது. இதனால், சமையல், சுற்றுலா, டிரைவிங், செய்திகள், விமர்சனங்கள் என யூடியூப் பக்கங்களில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம்.

தங்கள் கருத்துக்களை
பலருக்கும் வருமானத்தை அளிக்கக்கூடியதாவும் இது மாறிவிட்டது. தற்போதைய 21 ஆம் நூற்றாண்டில் மக்களின் வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாததாக இத்தகைய சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு அதன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அந்த வகையில், யுடியூப்பில் பலரும் தங்கெளுக்கன தனியாக சேனல்களை தொடங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தவறான தகவல்கள்
இதில் சிலரது யூடியூப் சேனல்களில் எல்லை மீறும் கருத்துக்களும் வெறுப்புணர்வை பரப்பும் வகையிலான கருத்துக்களும் வெளியாகின்றன. சிலரின் கருத்துக்கள் தேசத்துக்கு எதிராகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் பதிவிடுவதால் தேவையற்ற மோதலுக்கு இது வழிவகுப்பதாக அமைகிறது. அதேபோல், போலியான செய்திகளும் வெளியாகி தவறான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.

கடும் நடவடிக்கை
இந்த நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கவும் அந்த யூடியூபர்களுக்கு எதிராக க்ரிமினல் வழக்கு தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக தேசத்துக்கு எதிராகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செய்திகளை பதிவிடும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications