சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதா? டி. ராஜா கண்டனம்
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி. ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

போலீசாரின் இந்நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கி பதற்ற சூழ்நிலையை உருவாக்கினர்.
இப்போது குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் நாட்டில் கலவர சூழலை உருவாக்கிவிட்டனர். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை போலீசார் கட்டவிழ்த்துவிடுவது ஏற்க முடியாது. மக்கள் மீது வன்முறையை ஏவிவிடுவதை நிறுத்த வேண்டும்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் நாங்கள் முறையிட உள்ளோம். மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் டிசம்பர் 19-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
பிரியங்கா காந்தி கண்டனம்
இதேபோல் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசு தற்போது மாணவர்களையும் தாக்கியுள்ளது. அரசியல் சாசனத்தை பாதுகாக்க போராடுவோம். இந்த அரசுக்கு எதிராக போராடுவோம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications