கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்களுக்கு 'பாரத ரத்னா' வழங்கணும்.. அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடிய அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா இந்த அளவுக்கு குறைய காரணம் மருத்துவர்கள் மட்டும்தான்.

மருத்துவர்கள் அர்ப்பணிப்பு
மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவையே கொரோனா குறைய மிகப்பெரும் காரணம். இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலின்படி கொரோனா முதல் அலையில் பணியில் ஈடுபட்டிருந்த 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். கொரோனா 2-வது அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளது.

பாரத ரத்னா வழங்கணும்
இந்நிலையில் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு பாரத ரத்னா விருது ஒரு" இந்திய மருத்துவருக்கு "வழங்கப்பட வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இதன் மூலம் நான் எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் குறிக்கவில்லை.

தன்னலமற்ற சேவை
கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். லட்சக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி கவலைப்படாமல் தன்னலமின்றி மக்களுக்கு சேவை செய்தனர்.

உண்மையான கவுரவம்
அவர்களை கவுரவிக்கவும், நன்றி சொல்லவும் இதைவிட சிறந்த வழி என்ன? இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடையும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications