டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போனில் கொலை மிரட்டல்.. ஒரே பரபரப்பு.. போலீஸ் அதிரடி!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று இரவு போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்திய போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் மிரட்டல் விடுத்த நபரை பிடித்து விசாரித்தனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். சமீபத்தில் டெல்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றியை பதிவு செய்தது.

முன்னதாக கடந்த ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. குஜராத் சட்டசபை தேர்தலிலும் 5 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. வரும் கர்நாடகா சட்டசபை தேர்தலிலும் ஆம்ஆத்மி கட்சி சாதிக்கும் முனைப்பில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. இதற்கான பணிகளை அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று நள்ளிரவு 12.05 மணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை உடனடியாக துண்டித்துள்ளார். இதுபற்றி உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 38 வயது நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் டெல்லி கேட் பகுதியில் குருநானக் கண் மையத்தின் உள்ள நர்சிங் பிரிவில் ஊழியராக பணியாற்றியது தெரியவந்து. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி குலாபி பாக்கில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் ஹர்ரிந்தர் சிங் கூறுகையில், ‛‛நள்ளிரவு 12.05 மணிக்கு மிரட்டல் போன் வந்தது. உடனடியாக விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக உள்ளார். இதனால் கைது செய்யவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications