3ம் அலைக்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தெரிய தொடங்கி உள்ளது.. ஐசிஎம்ஆர் மருத்துவர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தெரிய தொடங்கி உள்ளது என்று ஐசிஎம்ஆர் மருத்துவர் டாக்டர் சாமிரான் பாண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒருவாரமாக தினமும் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. நாடு முழுக்க தற்போது 3,70,275 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. 3,19,18,809 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4,38,486 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கேரளாவில் மட்டும் 2,12,596 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது.

அங்கு தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவலின் போது தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் பதிவாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர் சமீரான் பண்டா எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மூன்றாம்

மூன்றாம்

இன்று ஐசிஎம்ஆர் மருத்துவர் டாக்டர் சாமிரான் பாண்டா அளித்த பேட்டியில், மூன்றாம் அலை இன்னும் 2 அல்லது 3 மாவட்டங்களில் அதிகரிக்கும் கருதப்பட்டது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை. ஏனென்றால் இப்போதே மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தெரிய தொடங்கி உள்ளது. விழா காலங்கள், பண்டிகைகள் காரணமாக கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அறிகுறி

அறிகுறி

அதிக அளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவல் திடீரென அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மக்கள் கூடும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இரண்டாம் அலையோடு ஒப்பிட்டால் மூன்றாம் அலை பாதிப்பு குறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் மூன்றாம் அலையில் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

 அதிக கூட்டம்

அதிக கூட்டம்

இதனால் அதேபோன்ற மாநிலங்கள் கொரோனா வேக்சின் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த மாநிலங்கள் கூடுதல் வேக்சின் செலுத்தினால் மூன்றாம் அலையை தவிர்க்க முடியும்.அதேபோல் இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்படாத மாநிலங்களில் லாக்டவுன் தளர்வுகளை மொத்தமாக கொண்டு வர கூடாது. கேரளா மற்றும் மிசோரத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

வேக்சின்

வேக்சின்

கொரோனா நோயாளிகள் அதிக அளவிற்கு பலருக்கு நோயை பரப்புவதே அங்கு கேஸ்கள் அதிகரிக்க காரணம். ஆனால் கேரளாவில் நோயாளிகள் முறையாக கண்டுபிடிக்கப்படுகிறார்கள். செரோ சர்வே அடிப்படையில் ஏற்கனவே 6-17 வயது குழந்தைகள் 50 சதவிகிதம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுவிட்டனர். இவர்களின் உடலில் ஆண்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வேக்சின் செலுத்துவது அவசரம் காட்ட கூடாது. முதலில் வயதானவர்கள், 18க்கும் அதிகமான வயது கொண்டவர்களுக்கு வேக்சின் போடுவதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+