பாரத் பந்த்.. வடமாநிலங்களில் ரயில், சாலை மறியல்.. விஸ்வரூபம் எடுத்த விவசாயிகள் போராட்டம்!
டெல்லி: கடந்த 4 மாதங்களாக விவசாய போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போது நாடு முழுக்க பாரத் பந்த் நடந்து வருகிறது. விவசாய சங்கங்கள் சார்பாக பாரத் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, போராட்டங்கள் நடந்து வருகிறது.
100 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நடக்கும் என்று விவசாய சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. கடந்த 4 மாதங்களாக விவசாய போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போது நாடு முழுக்க பாரத் பந்த் நடந்து வருகிறது.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாரத் பந்த் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் சங்கம் தவிர லாரி ஓட்டுனர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கமும் பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பல்வேறு சீக்கிய அமைப்புகளும் பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது
பாரத் பந்தை தொடர்ந்து வடமாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. முக்கியமாக ஹரியானா, பஞ்சாப்பில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு பல இடங்களில் ரயில்கள் , பேருந்துகள் மறிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பஞ்சாப்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் விவசாயிகள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் காரணமாக ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் நடக்காத தென்னிந்திய மாநிலங்களில் இந்த பந்த் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications