Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் இருந்தபடியே.. ரூ 200 கோடியை சுருட்டிய கில்லாடி சுகேஷ் சந்திரா.. என்ன நடந்தது? திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா சிறையில் இருந்தபடியே சுமார் ரூ 200 கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் எப்படி இதைச் செய்தார் என்பது குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூருவைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். இவர் மீது பல்வேறு மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன.

இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத்தர ரூ 50 கோடி லஞ்சம் வாங்கியதாக இவர் மீது வழக்கு உள்ளது. இது தவிர பல்வேறு பண மோசடி வழக்குகள், ஏமாற்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

200 கோடி ரூபாய்

200 கோடி ரூபாய்

பல்வேறு மோசடி வழக்கில் கைதாகியுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா தற்போது டெல்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காதலி நடிகை லீனா மரியாவுடன் சேர்ந்து இவர் பல இடங்களில் பண மோசடி செய்துள்ளார். குறிப்பாக அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் சிறையிலிருந்தபடியே 200 கோடி ரூபாய் பல தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றியுள்ளார்.

சிறையில் இருந்தபடி

சிறையில் இருந்தபடி

அதாவது சிறையில் இருக்கும் தொழிலதிபர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு, தன்னை முக்கிய அரசியல்வாதி என்று கூறி அறிமுகப்படுத்திக் கொள்ளும் சுகேஷ் சந்திரா, ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார், அப்படிதான் போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஷிவிந்தர் சிங் மற்றும் ரன் பாக்சி லேப் நிறுவன இயக்குநர் மால்விந்தர் சிங் ஆகியோருக்கு ஜாமீன் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளார்.

எப்படி

எப்படி

திகார் சிறையில் ஷிவிந்தர் சிங்கை சந்தித்த சுகேஷ் சந்திரா அவருக்கு ஜமீன் வாங்கி தருவதாகக் கூறி உள்ளார். வெளியே இருக்கும் என்னுடைய ஆட்களுக்குப் பணம் கொடுத்தால் உனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று கூறி உள்ளார். சிறையில் இருந்தபடியே ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கை தொடர்பு கொண்ட சுகேஷ் சந்திரா தன்னை மத்திய அமைச்சரக அதிகாரிகள் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்காகக் குரலை மாற்றும் சாப்ட்வேர்களையும் அவர் சிறையில் இருந்தபடியே பயன்படுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் போல

மத்திய அமைச்சர்கள் போல

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் உதவியாளர், உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலக ஊழியர் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயரைச் சொல்லிப் பேசியுள்ளார். கணவருக்கு எப்படியாவது ஜாமீன் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்ததால் அதிதி சிங்கும் அவர் கூறுவதை நம்பி தொடர்ந்து பணத்தை அனுப்பி வந்துள்ளார். இப்படி மட்டும் சுமார் 200 கோடி வரை பணத்தை அனுப்பியுள்ளார். இதனிடையே கடந்த ஜூலை மாதம் அதிதி சிங்கை தொடர்பு கொண்ட அமலாக்கத் துறை சுகேஷ் சந்திரா குறித்துத் தெரிவித்துள்ளனர்.

போலீசாரிடம் புகார்

போலீசாரிடம் புகார்

அப்போதுதான் அதிதி தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்துள்ளார். அதன் பிறகு சுகேஷ் சந்திரா உடனான தனது உரையாடல்களை அமலாக்கத்துறை அறிவுறுத்தல் படி பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். இப்படியே மொத்தம் 84க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன. இவை அனைத்தும் சுகேஷ் சந்திரா சிறையில் இருந்தபடி செய்துள்ளார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அதிதி சிங், இது தொடர்பாகப் புகார் அளித்த பிறகு, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல ரன் பாக்சி லேப் நிறுவன இயக்குநர் மால்விந்தர் சிங்கின் மனைவி சப்னாவிடம் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

சென்னை சொகுசு பங்களா

சென்னை சொகுசு பங்களா

சிறையில் இருந்தாலும் கூட இப்படி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு மோசடியில் ஈடுபட்டு வரும் சுகேஷ் சந்திரா வெறும் +2 வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள இவரது சொகுசு பங்களாவில் நடத்தப்பட்ட ரெய்டில் நடத்தப்பட்டுப் பல சொகுசு கார்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அழகிரி மகன் தயாநிதி அழகிரி என்று கூறிய போலீசாரிடமே ஆள் மாறாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+