அனைவருக்கும் இலவச வாக்சின்.. ஒரு மாதத்துக்கு 23 கோடி உற்பத்தி செய்யணும்.. இதெல்லாம் சாத்தியமா?
டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் எனில் அடுத்த 7 மாதங்களுக்கு மாதந்தோறும் 23 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்தாக வேண்டிய நெருக்கடி உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
Recommended Video
நாட்டில் மே மாதம் இறுதி வரை கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 16.8. இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவார்கள் எண்ணிக்கை 4.3 கோடி.
மொத்த மக்கள் தொகையான 136 கோடியில் இதுவரை 12% பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவர்கள் 3% பேர் மட்டுமே.

ஆண்டு இறுதிக்குள்...
18 வயதுக்கு கீழே உள்ளவர்களை (43.6 கோடி) கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் இலவச கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 12.5 கோடி பேருக்கு 2-வது டோஸும் 73.1 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் போடப்பட வேண்டும்.

தேவை 164 கோடி தடுப்பூசி டோஸ்கள்
அதாவது மொத்தம் 159 கோடி கொரோனா தடுப்பூசிகள் அடுத்த 7 மாதங்களில் தேவைப்படுகிறது. 3% கொரோனா தடுப்பூசிகள் சேதமடையும் என கணக்கில் வைத்துக் கொண்டால் மொத்தம் 164 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தேவைப்படும்.

23 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி
தற்போது நாட்டில் மாதத்துக்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள்தான் தயாரிக்கப்படுகின்றன. இதனைப் போல சுமார் நான்கரை மடங்கு கொரோனா தடுப்பூசிகள் அதாவது ஒரு மாதத்துக்கு 23 கோடி தடுப்பூசிகளை அடுத்த 7 மாதத்துக்குள் உற்பத்தி செய்தால்தான் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும். அல்லது நாட்டின் கொரோன தடுப்பூசி உற்பத்தியை கணக்கிட்டு இறக்குமதிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

நிம்மதியில் மாநிலங்கள்..
கடந்த 7-ந் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசிகளுக்கு மாநில அரசுகள் செலவு செய்ய தேவை இல்லை; 75% கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கும் என அறிவித்தார். ஆந்திரா, டெல்லி போன்றச் மாநிலங்கள்தான் கொரோனா தடுப்பூசிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. பெரும்பாலான மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி கொள்முதல் பெரும் சுமையாக இருந்தது. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பல மாநிலங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளன.
-
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications