அபாய கட்டம்... தண்ணீர் பிரச்சனையில் சிக்கப்போகும் பெருநகரங்கள்... பட்டியல் வெளியீடு
Recommended Video

டெல்லி: தண்ணீர் பிரச்சனையில், இந்தியாவின் பெருநகரங்கள் தீவிரமான அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் வெறும் நான்கு சதவீத நன்னீர் ஆதாரங்களே உள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமான தண்ணீர் பிரச்சனையை நாடு சந்தித்து வருகிறது என்று அரசின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நாட்டின் 21 நகரங்களில் 2020ஆம் ஆண்டிற்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அதுமட்டுமின்றி, 2030ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் 40 சதவீத இந்தியர்களுக்கு குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இந்தநிலையில், விரிஸ்க் மாப்லெகிராஃப்ட் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், உலகளவில் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆபத்துள்ள நாடுகளில் இந்தியா 46-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் 20 மிகப்பெரிய நகரங்களில் டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், நாசிக், ஜெய்ப்பூர், அகமதாபாத், இந்தூர் உள்ளிட்ட 11 நகரங்கள் தண்ணீர் பிரச்சனை அபாயத்தின் தீவிர கட்டத்தில் உள்ளதாகவும், 7 நகரங்கள் அதிக அபாயம் என்ற கட்டத்தில் இருப்பதாகவும் பட்டியலிட்டுள்ளது.
அதிகரிக்கும் மக்கள் தொகைப் பெருக்கம், மழை பெய்யாமை, தொடர் வறட்சி, நீர்நிலைகளை மேம்படுத்தாமை உள்ளிட்டவை தண்ணீர் பிரச்சனைக்கு காரணமாக சுட்டிக்காட்டியுள்ளது. 2035-ல் சென்னையில் தற்போதுள்ள மக்கள் தொகையை விட 47 சதவீதமும், டெல்லியில் 52 சதவீதமும் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது. எனவே அதற்கேற்ப நீர் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2024ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதுமுள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுப்போம் என்று பாரதிய ஜனதா கட்சி உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications