“கீழ இறங்கச் சொல்லியும் கேட்கல..” தைரியமான ஆளுதான் - உச்சிக்கு போவதற்கு முன்பே உயிர் போன சோகம்!
டெல்லி: நேபாளத்தில் உள்ள காஞ்சன் ஜங்கா மலை உலகின் மூன்றாவது மிக உயரமான மலை. 1852ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்பட்டது. 8,200 மீட்டர் உயரம் கொண்ட இந்த காஞ்சன் ஜங்கா மலைக்கு உலகம் முழுவதுமிருந்து ஏராளமான மலையேறும் வீரர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மலை உச்சிக்கு அருகே செல்லும்போது, அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவரை கீழே இறங்குமாறு வழிகாட்டி வற்புறுத்தியதாகவும், அதை மறுத்து அவர் ஏறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 52 வயதான நாராயண் அய்யர் என்பவர் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறியுள்ளார். நாராயண் மலை உச்சிக்கு அருகே சென்றபோது திடீரென்று உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மலையேறும் பயணத்திற்கு ஏற்பாடு செய்த அமைப்பின் இயக்குநர் கூறுகையில், நாராயண் அய்யருக்கு 2 உதவியாளர்களை ஏற்பாடு செய்திருந்தோம். உச்சிக்கு செல்லச் செல்ல அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவரை கீழே இறங்குமாறு வழிகாட்டி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அவர் உச்சிக்குச் செல்லாமல் இறங்கமாட்டேன் என மறுத்துவிட்டார். இதனால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நாராயணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications