Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கீழ இறங்கச் சொல்லியும் கேட்கல..” தைரியமான ஆளுதான் - உச்சிக்கு போவதற்கு முன்பே உயிர் போன சோகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேபாளத்தில் உள்ள காஞ்சன் ஜங்கா மலை உலகின் மூன்றாவது மிக உயரமான மலை. 1852ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்பட்டது. 8,200 மீட்டர் உயரம் கொண்ட இந்த காஞ்சன் ஜங்கா மலைக்கு உலகம் முழுவதுமிருந்து ஏராளமான மலையேறும் வீரர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மலை உச்சிக்கு அருகே செல்லும்போது, அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவரை கீழே இறங்குமாறு வழிகாட்டி வற்புறுத்தியதாகவும், அதை மறுத்து அவர் ஏறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Indian climber dies On Mt Kanchenjunga in Nepal

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 52 வயதான நாராயண் அய்யர் என்பவர் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறியுள்ளார். நாராயண் மலை உச்சிக்கு அருகே சென்றபோது திடீரென்று உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலையேறும் பயணத்திற்கு ஏற்பாடு செய்த அமைப்பின் இயக்குநர் கூறுகையில், நாராயண் அய்யருக்கு 2 உதவியாளர்களை ஏற்பாடு செய்திருந்தோம். உச்சிக்கு செல்லச் செல்ல அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவரை கீழே இறங்குமாறு வழிகாட்டி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், அவர் உச்சிக்குச் செல்லாமல் இறங்கமாட்டேன் என மறுத்துவிட்டார். இதனால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நாராயணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+