மருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்
டெல்லி: நாடு முழுவதும் மருத்துவர்கள் மீது நடைபெறும் தாக்குதலைக் கண்டித்து வரும் ஜூன் 18ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்தது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் நிரம்பின.
இந்த காலகட்டத்தில் மருத்துவர்களின் சேவை என்பது அளப்பரியது. தினசரி பல மணி நேரம் பணிபுரிந்து எண்ணற்ற உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

மருத்துவர்கள் மீது தாக்குதல்
இருப்பினும், நாட்டில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளன. உத்தரப் பிரதேசம், அசாம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'Save the Saviors' என்ற முழக்கத்துடன் வரும் ஜூன் 18ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

மருத்துவர்கள் போராட்டம்
இது குறித்து மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் வரும் ஜூன் 18ஆம் தேதி கருப்பு பேட்ஜ்கள், மாஸ்க்குகள், ரிப்பன்கள், சட்டைகள் அணிந்து பணிக்குச் செல்ல வேண்டும். நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், நாட்டிலுள்ள மருத்துவமனைகளைப் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ராம்தேவ் சர்ச்சை
ஏற்கனவே யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்துக் கூறிய கருத்துகளை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது என்றும் கொரோனாவை விட அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும் அவர் கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முடிவுக்கு வந்த சர்ச்சை
இதற்குக் கண்டனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் தான் கூறிய கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர்கள் கடவுள் அனுப்பிய தூதர்கள் என்றும் ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தவறு காரணமாக அனைத்து மருத்துவர்களையும் குறை சொல்ல முடியாது என்று அவர் கூறியிருந்தார். இது இரு தரப்பிற்கும் நிலவிய மோதலை சற்றே குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது..
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications