Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மீடியா ஒன்' லைசன்ஸ் விவகாரம்: ஆவணங்களை சமர்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல மலையாள செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் லைசன்ஸை புதுபிக்க முடியாது என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

கேரளாவில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளுக்குப் பேர்போன தொலைக்காட்சி 'மீடியா ஒன்'. இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தடைவிதித்தது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து மீடியா ஒன் டி.வி சேனலின் பெயர் நீக்கப்பட்டது. இதனால், அதன் ஒளிபரப்பு சேவை தடைப்பட்டது.

மீடியா ஒன்

மீடியா ஒன்

கடந்த ஆண்டு முதலே மீடியா ஒன் டி.வி சார்பில், சேனல் உரிமத்தைப் புதுபிப்பதற்கான விண்ணப்பம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், மீடியா ஒன் சேனலுக்குப் பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை என்று கூறி சேனலின் உரிமத்தைப் புதுப்பிக்க ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணம்

பாதுகாப்பு காரணம்

ஜமாத் இ இஸ்லாமிக்கு ஆதரவு கொடுப்பதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற இந்த செய்தி நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்யமம் நிறுவனத்தின் 'மீடியா ஒன்' கேரள நீதிமன்றத்தில், ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்ய சொல்லி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கேரள நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

 உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பைஅடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர் மீடியா ஒன் நிறுவனத்தினர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசந்த், மீடியா ஒன் நிறுவனத்தில் லைசன்ஸ் வழங்காததற்கான காரணத்தையும் அதற்கு உரிய ஆவணத்தையும் வரும் 15ம் தேதி சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

 ஊழியர்கள்

ஊழியர்கள்

தொலைக்காட்சி நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் தேவ் வாதாடினார். அப்போது, ''இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 400 பத்திரிக்கையாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, லைசன்ஸ் வழங்க வேண்டும் என்று வாதாடினார். மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்யும் வரை அமைதியாக இருங்கள் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தடை

தடை

மீடியா ஒன் சேனலுக்கு, மத்திய அரசு ஏற்கெனவே 2020-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து, கேரளாவைச் சேர்ந்த மீடியா ஒன், ஏசியாநெட் ஆகிய சேனல்கள் ஒருதலைப்பட்சமாக செய்தி ஒளிபரப்பியதாகவும், மத்திய அரசின் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி, 48 மணி நேரத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+