500 காண்டம்-400 மதுபாட்டில் பறிமுதல்.. விபச்சார வழக்கில் மேகாலயா பாஜக துணை தலைவர் கைது..முழு பின்னணி
டெல்லி: மேகாலயாவில் விபசார விடுதி நடத்தியதாக கூறி அம்மாநில பாஜக துணை தலைவர் பெர்னார்ட் என் மார்க் கைதான நிலையில் அவரது பண்ணை வீட்டில் இருந்து 500 காண்டம், 400 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
மேகாலயா மாநிலம் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் துரா பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் இரவு நேரத்தில் துரா பகுதியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது பண்ணை வீட்டில் ஏராளமான அறைகள் இருந்தன.

விபசாரம் - கைது
அதாவது பண்ணை வீடானது 3 மாடியாக அமைந்து இருந்தது. இதில் முதல் தளம், 2வது தளத்தில் ஏராளமானவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் தான் சில அறைகளில் விபச்சாரம் நடப்பது தெரியவந்து. இதையடுத்து போலீசார் 23 பெண்கள், 73 இளைஞர்களை கைது செய்தனர். அதோடு 4 சிறுவர்கள், 2 சிறுமிகள் என 6 பேரை மீட்டனர். இதையடுத்து இந்த பண்ணை வீடு யாருக்கு சொந்தமானது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.

பாஜக துணை தலைவரின் பண்ணை வீடு
விசாரணையில் மேகாலயா மாநில பாஜக துணை தலைவரான பெர்னார்ட் என் மரக் என்பவருக்கு சொந்தமானது என்பதும் அவர் கேரா ஹில்ஸ் பகுதியில் மாவட்ட கவுன்சிலராக இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே பண்ணை வீட்டில் போலீசார் சோதனை நடத்தி கைது செய்திருப்பதை அறிந்த அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடினர்.

உத்தர பிரதேசத்தில் கைது
இந்நிலையில் தான் பெர்னார்ட் என் மரக் உத்தர பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் அறிந்தனர். இதையடுத்து நேற்று உத்தர பிரதேசத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். பண்ணை வீடு என்ற பெயரில் விபசார விடுதி நடத்தியதாக கூறி உத்தர பிரசேத்தின் ஹாபூர் மாவட்டத்தில் பதுங்கிய அவரை மேகாலயமா போலீசார் கைது செய்தனர்.

500 காண்டம் பறிமுதல்
இந்நிலையில் தான் பண்ணை வீட்டில் நடந்த சோதனை குறித்து போலீசார் சில விபரங்களை கூறியுள்ளனர். அதன்படி சோதனை வேளையில் பண்ணை வீட்டில் 400 மதுபான பாட்டில்கள், 500 ஆணுறைகள் இருந்தன. பெட்டியில் தனித்தனியே இருந்த இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 'ரிம்பு பாகன்' என்ற பெயர் கொண்ட பண்ணை வீட்டில் இருந்து கார் உள்பட 27 வாகனங்கள் இருந்தன. 8 டூவீலர்கள் இருந்தன. 10க்கும் அதிகமான கார்கள் நின்றன. இந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications