'இந்தியாவில் 5ஜி இணைய சேவை.. இந்த ஆண்டே அலைக்கற்றை ஏலம்..' நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
டெல்லி: 2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் இணைய இணைப்பு வசதி செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 5ஜி சேவை வழங்க அலைக்கற்றைகள் நடப்பாண்டில் ஏலம் விடப்படும் என்றும் 5ஜி இணைய சேவை விரைவில் தொடங்கப்படும்' என்றும் அவர் கூறினார்.
Recommended Video

நாடாளுமன்றத்தில் 2022- 23 மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தொடர் அறிவிப்புகள்
முழுவதும் டிஜிட்டல் முறையிலான காகிதம் அல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திரட்டி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இணைய சேவைகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

விரைவில் 5ஜி சேவை
அதாவது நாட்டில் 5ஜி சேவை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய இணைப்பு வசதி செய்யப்படும் என்று கூறிய நிர்மலா சீதாராமன் தனியார் தொலைத்தொடர்பு வழங்குநர்களால் 5G மொபைல் சேவைகளை வெளியிடுவதற்கு தேவையான ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022 இல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மலிவு விலையில் பிராட்பேண்ட்
கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் தொடர்புகளை செயல்படுத்தும் வகையில், PLI திட்டத்தின் ஒரு பகுதியாக, 5G சுற்றுச்சூழல் அமைப்பிற்காக, வடிவமைப்பு தலைமையிலான உற்பத்திக்கான திட்டம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இணைய வசதி மிகவும் முக்கியம்
நமது நாட்டில் இப்போது 4ஜி இணைய சேவை இருக்கும் நிலையில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளது பல்வேறு வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்விக்கு கூட இணைய வசதி மிகவும் தேவையாக உள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட இணைய வசதி மிகவும் முக்கியம்.

குக்கிராமங்களில் வளர்ச்சி
தற்போது குக்கிராமங்களில் கூட இணைய வசதி மேம்பட்டு வரும் நிலையில் 5ஜி சேவை தொடங்கப்படும்கூட நெட்வொர்க் நிலை இப்போது இருப்பதை விட வேகமாக இருக்கும். இணைய வளர்ச்சியால் கிராமப்புற வளர்ச்சியும் அதிமாக இருக்கும் என்று தொலைத்தொடர்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications