156.76 கோடி டோஸ்கள்- கொரோனா தடுப்பூசி போட ஆரம்பிச்சு ஒரு ஆண்டு நிறைவு- பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. இதுவரை இந்தியாவில் 156.76 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தது. தெலுங்கானாவின் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அறிமுகம் செய்தது.

கொரோனா தடுப்பூசிகள்
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் மெகா முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு போடப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

தடுப்பூசி போட்டவர்கள் எத்தனை பேர்?
இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92% பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 68%-க்கும் அதிகமானோர் 2 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது.

பூஸ்டர் தடுப்பூசி
தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் ஜனவரி 10-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சுகாதாரம், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ட்வீட்
கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 66 லட்சம் தடுப்பூசிகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66 லட்சத்துக்கும் அதிகமாக (66,21,395) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 156.76 கோடியைக் (1,56,76,15,454) கடந்தது. 1,68,19,744 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,38,331 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,50,85,721 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.51 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,71,202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 15,50,377. ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 4.18 சதவீதமாக உள்ளது.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications