லட்சத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்ட அரசு நடவடிக்கைகள்- பாப்புலர் ஃப்ரண்ட் கடும் எதிர்ப்பு
டெல்லி: லட்சத்தீவு மக்களின் கலாச்சார அடையாளத்திற்கும், சிவில் உரிமைகளுக்கும் எதிரான நகர்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் அம்மக்களின் மத, கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்திற்கும், பழங்குடி மக்களின் சிவில் உரிமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்க நாட்டின் ஜனநாயக சக்திகள் முன் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அகில இந்திய தலைவர் ஓ.எம்.ஏ ஸலாம் வெளியிட்டுள்ள அறிக்கை:
யூனியன் பிரதேசத்தின் நிர்வாகிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டிய தற்போதைய விதிமுறையை மீறி, யூனியன் பிரதேசத்தின் புதிய மத்திய நிர்வாகியாக பாஜக தலைவரான பிரபுல் படேலின் நியமனம் என்பது மோசமான நோக்கங்களுடன் கூடிய ஒரு அரசியல் முடிவாகும். மோடியின் நிர்வாகத்தின் கீழ் முன்னெப்போதும் இல்லாத இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் தீவுவாசிகளின் அன்றாட வாழ்க்கையில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் அழிக்கக்கூடும் என பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது.
Recommended Video
ஏறக்குறைய ஒரு வருடமாக கோவிட் இல்லா பகுதியாகவே இருந்த தீவுப்பகுதியில் பிரபுல் படேலால் திருத்தப்பட்ட கோவிட் நெறிமுறை, தொற்றுநோய் வேகமாக பரவ வழிவகுத்துள்ளது. திருத்தப்பட்ட நெறிமுறையை எதிர்த்து போராட முன்வந்தவர்கள் கடுமையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாட்டிறைச்சி தடை, பள்ளி மதிய உணவு அட்டவனையிலிருந்து மாட்டிறைச்சி நீக்கம், லட்சத்தீவு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் வளர்ச்சி என்ற பெயரில் எந்தவொரு நிலத்தையும் கையகப்படுத்த அரசாங்கத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரம், பெரும்பான்மையான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான தற்காலிக தொழிலாளர்கள் சுற்றுலா மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து வெளியேற்றம், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களை உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் போட்டியிடவிடாமல் தடை செய்தல் உள்ளிட்ட கொடூர சட்ட நடைமுறைகளை கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.
லட்சத்தீவு என்பது நமது விடுமுறை நாட்களில் வெப்பமண்டலத்திலிருந்து தப்பிக்க தேடும் சுற்றுத்தலம் என்பதை விட முக்கியமானது. அனைத்து இந்திய குடிமக்களையும் போன்று சம உரிமை கொண்ட, பழங்குடியினர் என்ற சிறப்பு உரிமையை கூடுதலாக கொண்ட மக்களின் வாழ்விடம் ஆகும்.
அவர்கள் தங்கள் சொந்த மத, கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்தைக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் சிவில் உரிமைகளை பறிக்கவும், அவர்களின் தனித்துவமான அடையாளத்திற்கு ஆபத்து விளைவிக்கும் மத்திய அரசின் இந்துத்துவ அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்க்கவும், கண்டிக்கவும் நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைக்கிறது. இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அகில இந்திய தலைவர் ஓ.எம்.ஏ ஸலாம் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications