Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜீவ்குமார் இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

ஜார்கண்டை சேர்ந்த 1984ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார், மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதிச்சேவை செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajiv Kumar appointed new chief election commissioner

1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி பிறந்த ராஜீவ் குமார் 1984 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள ராஜீவ் குமார் மத்தியிலும், பீகார்/ஜார்கண்ட் மாநிலத்திலும் பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, அசோக் லவாசா இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள சுஷீல் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து மே 15ஆம் தேதியன்று ராஜீவ் குமார் இந்தியாவின் 25வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+