US Tax: இந்தியாவுக்கு அமெரிக்கா வரியை குறைத்தது ஏன்? டிரம்ப் முடிவுக்கு என்ன காரணம்?
டெல்லி: அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. இந்த வரி குறைப்பு முடிவுக்கு என்ன காரணம் எனப் பார்க்கலாம்.
அமெரிக்கா இந்தியா மீது கடந்த ஆண்டு 25% முதல் 50% வரை வரி உயர்த்தியது. அதற்கு முக்கிய காரணம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி இறக்குமதி செய்ததுதான். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரின்போது உலகளவில் பொருளாதாரத்தில் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது மேலும், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுக்கு அதரவு தெரிவித்தன.

அமெரிக்கா வரி விதிப்பு
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் எண்ணெய் கொள்முதல் செய்தது. இதற்கு அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து தங்களது எதிர்ப்பை மீறி கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வரும் காரணத்தால் 50 சதவீதம் வரி விதிக்கும் நடவடிக்கையை எடுத்தது அமெரிக்கா.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் வாங்கும் ஒப்பந்தத்திற்கு பிறகு, வரி 25% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பரஸ்பர வரி 25%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளதால், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக விதிக்கப்பட்ட கூடுதலான 25% வரியும் நீக்கப்படுவதாகத் தெரிகிறது.
வரி குறைப்பு முடிவு
இந்தியா - அமெரிக்கா இடையே இந்த வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டதற்கான முதன்மையான காரணம், மோடி "ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவிலிருந்தும், வெனிசுலாவிலிருந்தும் இன்னும் அதிகமாக வாங்கவும் ஒப்புக்கொண்டார்" என்பதே. "இது உக்ரைனில் இப்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மோடி தன்னிடம் ஒரு கோரிக்கையை வைத்ததாகவும், அதனால்தான் "உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம், இதன் மூலம் அமெரிக்கா குறைக்கப்பட்ட பரஸ்பர வரியை வசூலிக்கும், அதை 25% இலிருந்து 18% ஆகக் குறைக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
காரணங்கள்
பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிகம் வாங்குவதாக உறுதியளித்தார். இது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா அமெரிக்க ஆற்றல், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களுக்கு 500 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யும் வகையில் Buy American கொள்கையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது.
இந்தியா தனது அமெரிக்க பொருட்களுக்கான வரிகள் மற்றும் தடைகளை பூஜ்யம் ஆக்குவதாக ஒப்புக்கொண்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக டிரம்ப் இந்த வரி குறைப்பு முடிவை எடுத்துள்ளார்.
-
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications