விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி ஆர் சோதனை கட்டணம் 9 மடங்கு உயர்வு.. பயணிகள் குற்றச்சாட்டு!
டெல்லி: உலகம் முழுவதையும் கொரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தி வரும் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனா ஓமிக்ரான் என்று அழைக்கப்படுகிறது. இந்த உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆர்.டி.பி.சி ஆர் சோதனை
ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் இந்தியாவும் மிகவும் எச்ச்ரிக்கையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் தீவிரமாக பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கட்டாயம் ஆர்.டி.பி.சி ஆர் சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவு
தென்னாப்பிரிக்கா போன்ற ஓமிக்ரான் வைரஸ் ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு RT-PCR சோதனைக்கான மாதிரிகளை கொடுக்க வேண்டும். பாசிட்டிவ் கண்டறியப்பட்ட எவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டாரா என்பதை அறிய மரபணு சோதனைக்கு அனுப்பப்படும். ஓமிக்ரான் பாதிப்பு இருந்தால் மிக கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் இருக்கும். மரபணு சோதனையில் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தாலும் ஏழு நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.

9 மடங்கு அதிக கட்டணம்
மத்திய அரசின் உத்தரவால் டெல்லி, மும்பை, பெங்களுரு உள்பட நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் RT-PCR சோதனை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதுள்ளது. வழக்கமாக RT-PCR சோதனை ரூ.500-க்கு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பல விமான நிலையங்ககளில் 9 மடங்கு அதிகமாக அதாவது ரூ.4,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

பெங்களூரு, டெல்லி
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ3,000, டெல்லி விமான நிலையத்தில் ரூ.3,900 மற்றும் மும்பை விமான நிலையத்தில் ரூ.4,500 என பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி கூடுதல் பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் RT-PCR சர்டிபிகெட் கொடுக்கப்படுகிறது என்றும் நிர்ணையிக்கப்பட்ட கட்டணம் கொடுக்கும் மற்றவர்களுக்கு RT-PCR சோதனை செய்ய ஆறு மணி நேரத்துக்கும் மேலாவதாக புகார்கள் வருகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications