பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பு காலக்கெடுவை ஆக. 31-க்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் ஆளுநர் கல்யாண்சிங், உமாபாரதி உள்ளிட்ட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கு விசாரணை நடைபெற்றதால் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.. இதனால் 2017-ம் ஆண்டு, இந்த வழக்கு விசாரணையை 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் மற்றொரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 6 மாதங்களுக்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும்; அடுத்த 3 மாதங்களில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் லாக்டவுன் அமலில் இருந்ததால் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஶ்ரீ யாதவ் உச்சநீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications