ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்?
டெல்லி: ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மீது முடிவு எடுக்க தமிழக ஆளுநர் பன்வாரில் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடும் என தெரிகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை; ஆகையால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டு என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது 7 தமிழரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகாலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு எடுக்காமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார் நீதிபதி நாகேஸ்வர ராவ்.
மேலும் இன்றைய விசாரணையில் நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது: அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிட முடியுமா? இது தொடர்பான விவரங்களை பேரறிவாளன் வழக்கறிஞர் சங்கர நாராயணன் தாக்கல் செய்ய வேண்டும்.
அத்துடன் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதிலும் சட்டசபை தீர்மானங்கள் மீது முடிவு எடுப்பதிலும் தாமதம் ஏற்படும் நிலையில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று ஆளுநர்களை நீதிமன்றம் கேட்டுக் கொள்ள முடியும் என 2014-ம் ஆண்டு சத்ருகன் சவுகான் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் சுட்டிக்காட்டினார்.
இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் 7 தமிழர் விடுதலை தொடர்பாக விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உத்தரவிடவே வாய்ப்புள்ளது என்கிறன உச்சநீதிமன்ற வட்டாரங்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications