ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்?
டெல்லி: ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மீது முடிவு எடுக்க தமிழக ஆளுநர் பன்வாரில் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடும் என தெரிகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை; ஆகையால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டு என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது 7 தமிழரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகாலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு எடுக்காமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார் நீதிபதி நாகேஸ்வர ராவ்.
மேலும் இன்றைய விசாரணையில் நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது: அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிட முடியுமா? இது தொடர்பான விவரங்களை பேரறிவாளன் வழக்கறிஞர் சங்கர நாராயணன் தாக்கல் செய்ய வேண்டும்.
அத்துடன் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதிலும் சட்டசபை தீர்மானங்கள் மீது முடிவு எடுப்பதிலும் தாமதம் ஏற்படும் நிலையில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று ஆளுநர்களை நீதிமன்றம் கேட்டுக் கொள்ள முடியும் என 2014-ம் ஆண்டு சத்ருகன் சவுகான் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் சுட்டிக்காட்டினார்.
இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் 7 தமிழர் விடுதலை தொடர்பாக விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உத்தரவிடவே வாய்ப்புள்ளது என்கிறன உச்சநீதிமன்ற வட்டாரங்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications