ஆதார்-வாக்காளர் எண் “லிங்க்” கூடாது.. ராணுவ அதிகாரி வழக்கு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை தொடங்கியது. அப்போதே இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை நிறுத்துமாறு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

சட்டதிருத்தம்
இதற்கிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சீர்திருத்த சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்று சட்டமானதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இணைப்பு பணி
ஆனால், இந்த மசோதாவுக்கு திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டிலும் அரசு அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்றும், சிறப்பு முகாம்களை அமைத்தும் துரிதமாக ஆதார் - வாக்காளர் அட்டை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டாயப்படுத்தல்
எதிர்ப்புகள் எழுந்த பகுதிகளில் கருத்துக் கேட்பு மற்றும் விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பல பகுதிகளில் மக்களை கட்டாயப்படுத்தி இந்த இணைப்பு பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் மூலம் வாக்குரிமை பறிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு அச்சங்களை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்
இது தொடர்பான செய்திகள் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளான நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் இல்லை என்று கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தார். தேர்தல் ஆணையமும் இந்த இணைப்பு கட்டாயம் இல்லை என்றே விளக்கமளித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.ஓம்பத்கரே இதற்கு எதிராக பொதுநல மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமையை மறுக்கக்கூடாது என்றும், இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியாம் திவான் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்
இதனை விசாரணைக்கு ஏற்ற எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டது. அத்துடன் ஆதார் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுடன் இணைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications