கொரோனா உயிரிழப்புகள்..இறப்பு சான்றிதழில் என்ன காரணம் குறிப்பிடப் போகிறீர்கள்? உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் அளிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கொரோனாவால் ஒருவர் வீட்டில் உயிரிழந்திருந்தாலும் இறப்பிற்கான காரணத்தில் கோவிட் 19 எனக் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் உயிரிழப்புகள் அதிகபட்சமாக நான்காயிரத்தைக் கூட கடந்தது.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழ் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இறப்பு சான்றிதழ்
இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர் ஷா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரோனா நோயாளிகளின் இறப்புச் சான்றிதழ்கள் மரணத்திற்கான காரணங்களாக வேறு சில காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும், நீதிபதிகள் கூறுகையில், ஏற்கனவே இறப்பு சான்றிதழ்களில் வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தால், அது குறித்து மத்திய அரசு என்ன செய்யப் போகிறது.

எளிமைப்படுத்த வேண்டும்
கொரோனா இறப்புகளுக்குச் சான்றிதழ் வழங்குவதற்கான முறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும். நோயாளி மருத்துவமனையில் உயிரிழந்திருந்தாலும் வெளியில் உயிரிழந்திருந்தாலும் அவருக்கு கொரோனா பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தால், அவருக்கு இறப்பு சான்றிதழில் காரணத்தை கோவிட் 19 என குறிப்பிட முடியுமா?" என்று கேட்டனர்.

அரசு விளக்கம்
இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, கொரோனா சார்ந்த மரணங்கள் அனைத்திற்கும் இறப்பு சான்றிதழ்களில் COVID-19 என்றே குறிப்பிட வேண்டும். இது தான் அரசின் நிலைப்பாடு. அவ்வாறு அளிக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட மருத்துவர் உட்பட அனைவரது மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மத்திய அரசு
முன்னதாக மத்திய அரசு இது குறித்துத் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கொரோனா சார்ந்த அனைத்து உயிரிழப்புகளும் காரணமாக கோவிட் 19 என்றே குறிப்பிட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருந்து. கொரோனா நோயாளி ஒருவர மற்ற காரணங்களால் உயிரிழந்துள்ளார் என்பது மிக உறுதியாகத் தெரியவிட்டால், இறப்பிற்கான காரணத்தை கோவிட் 19 என்று குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications