கொரோனா உயிரிழப்புகள்..இறப்பு சான்றிதழில் என்ன காரணம் குறிப்பிடப் போகிறீர்கள்? உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் அளிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கொரோனாவால் ஒருவர் வீட்டில் உயிரிழந்திருந்தாலும் இறப்பிற்கான காரணத்தில் கோவிட் 19 எனக் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் உயிரிழப்புகள் அதிகபட்சமாக நான்காயிரத்தைக் கூட கடந்தது.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழ் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இறப்பு சான்றிதழ்
இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர் ஷா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரோனா நோயாளிகளின் இறப்புச் சான்றிதழ்கள் மரணத்திற்கான காரணங்களாக வேறு சில காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும், நீதிபதிகள் கூறுகையில், ஏற்கனவே இறப்பு சான்றிதழ்களில் வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தால், அது குறித்து மத்திய அரசு என்ன செய்யப் போகிறது.

எளிமைப்படுத்த வேண்டும்
கொரோனா இறப்புகளுக்குச் சான்றிதழ் வழங்குவதற்கான முறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும். நோயாளி மருத்துவமனையில் உயிரிழந்திருந்தாலும் வெளியில் உயிரிழந்திருந்தாலும் அவருக்கு கொரோனா பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தால், அவருக்கு இறப்பு சான்றிதழில் காரணத்தை கோவிட் 19 என குறிப்பிட முடியுமா?" என்று கேட்டனர்.

அரசு விளக்கம்
இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, கொரோனா சார்ந்த மரணங்கள் அனைத்திற்கும் இறப்பு சான்றிதழ்களில் COVID-19 என்றே குறிப்பிட வேண்டும். இது தான் அரசின் நிலைப்பாடு. அவ்வாறு அளிக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட மருத்துவர் உட்பட அனைவரது மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மத்திய அரசு
முன்னதாக மத்திய அரசு இது குறித்துத் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கொரோனா சார்ந்த அனைத்து உயிரிழப்புகளும் காரணமாக கோவிட் 19 என்றே குறிப்பிட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருந்து. கொரோனா நோயாளி ஒருவர மற்ற காரணங்களால் உயிரிழந்துள்ளார் என்பது மிக உறுதியாகத் தெரியவிட்டால், இறப்பிற்கான காரணத்தை கோவிட் 19 என்று குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications