சாரதா சிட் பண்ட்.. மாஜி கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிக்கல்.. கைது செய்ய தடை நீக்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள், போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு வழங்கிய சட்ட பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயன்ற போது, அதை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் பெரும் தர்ணா போராட்டத்தை முன்னெடுத்தார்.

தடுத்த காவல்துறை
முன்னதாக, ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்ற போது, அவர்களை கொல்கத்தா காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, விசாரணை செய்வதற்கு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்ற பரபரப்பு சம்பவமும் அரங்கேறியது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கு விசாரணையின் போது ராஜீவ் குமாரை கைது செய்து விசாரிக்க, அனுமதி தேவைப்படுகிறது என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தவர் ராஜீவ் குமார். அப்போது வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழித்தார். இது தொடர்பாக உரிய ஆதாரங்கள் இருக்கிறது என்று சிபிஐ வாதத்தை முன் வைத்தது.

சிபிஐக்கு இடைக்கால தடை
தனிப்பட்ட முறையில், அவமானபடுத்தும் நோக்கத்துடன்தான் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்புவதாக, ராஜீவ் குமார் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு சிபிஐ இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

ஹைகோர்ட்டில் முன் ஜாமீன்
இந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது ராஜ்குமாரை கைது செய்ய கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை 7 நாட்களுக்குள் ராஜீவ் குமார் அணுகிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ராஜ்குமார் முன்ஜாமீன் கேட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications