ஐபோன்.. சிறை அறைக்கு கர்டைன்கள்.. அதிகாரிகளுக்கு மாதம் ரூ 65 லட்சம் செலவு.. சுகேஷின் வாக்குமூலம்
டெல்லி: திகார் சிறையில் சொகுசாக இருக்க சுகேஷ் சந்திரசேகர் மாதந்தோறும் சிறை அதிகாரிகளுர்ரு ரூ 65 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சிறைத் துறை கண்காணிப்பாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்புடன் இருப்பதாக பல அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டிருந்த போது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

திகார் சிறை
இந்த வழக்கில் இவருடன் கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் இவர் மட்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். முன்னணி மருந்து நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியிடம் இருந்து 200 கோடி ரூபாய் சுகேஷ் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரோஹினி சிறை
இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றவியல் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மகாராஷ்டிரா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோஹினியில் உள்ள சிறையில் இருந்த சுகேஷிடம் திகார் சிறை துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் ஐபோன் இருந்தது கண்டறியப்பட்டது.

செல்போன்
மேலும் அவருக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதையும் கண்டறிந்தனர். இவர் செல்போன் பயன்படுத்துவதையும் இதர சலுகைகளை அனுபவிப்பதையும் மற்ற கைதிகளோ சிறை துறையினரோ அறியாத வகையில் தனது பெட்ஷீட் மூலம் திரையை போட்டு தனது சிறை அறையையே மூடியுள்ளார் என தெரிகிறது.

ஐபோன்
இதையடுத்து அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில் சிறை அதிகாரிகள் மூலம் ஐபோன் வாங்கியதாகவும் அந்த போனுக்கான செட்டிங்ஸ் சென்னையில் ஒருவர் செய்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதற்காக மாதத்தில் இரு முறை ரூ 65 லட்சத்தை தனக்கு சலுகை காட்டும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதும் தெரியவந்தது.

ரோகிணி சிறை அதிகாரிகள்
சுகேஷ் முன்பு அடைக்கப்பட்டிருந்த திகார் சிறை, தற்போது அடைக்கப்பட்டுள்ள ரோகிணி சிறை அதிகாரிகள் 9 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 சிறை கண்காணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications