அப்பாடா.. இப்பதான் கொஞ்சம் நிம்மதி.. தினகரனின் பெரா வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
டிடிவி தினகரனுக்கு எதிரான பெரா வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
டெல்லி: டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை எழும்பூர் கோர்ட் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது.
டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வில் பெரிய தலைவலியாக இருந்து கொண்டிருப்பது இந்த அன்னிய செலாவணி வழக்குதான்.கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கும் மேலாக இந்த கேஸ் எழும்பூர் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டது.

மேல்முறையீடு
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை டிடிவி தினகரனுக்கு வழங்கும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இடைக்கால தடை
இது சம்பந்தமாக விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் பெரா வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினகரனுக்கு நோட்டீஸ்
மேலும் தினகரன் தரப்பில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் தினகரனுக்கு வழங்க வேண்டுமெனவும் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்கவும் டிடிவி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொஞ்சம் ஆறுதல்
ஆர்.கே.நகர் வெற்றிக்கு பிறகு எதை தொட்டாலும் சரிவு, எங்கு திரும்பினாலும் தோல்வி என்றே டிடிவி தினகரனுக்கு அமைந்துவிட்டது. 18 எம்எல்ஏக்கள் வழக்கு, குக்கர் சின்னம் உள்ளிட்ட பல கோர்ட் கேஸ்களின் தீர்ப்புகள் சரிவையே தந்து கொண்டிருந்த நிலையில், இப்போது பெரா வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது தினகரனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என தெரிகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications